இது புதிய இந்தியா…. ஊழல் செய்தவர்கள் ஓடி ஒளிந்தனர்! மோடி பெருமிதம்!!

 

இது புதிய இந்தியா…. ஊழல் செய்தவர்கள் ஓடி ஒளிந்தனர்! மோடி பெருமிதம்!!

இரண்டு நாட்கள் அரசுமுறை பயணமாக பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, பாரிசில் உள்ள யூனெஸ்கோ தலைமை அலுவலகத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்களிடையே உரையாற்றினார்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, “புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு மக்கள் எங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளனர். முடியாது என நினைத்த பலவற்றை, அடைவதற்கான இலக்குகளாக நிர்ணயித்துள்ளோம். ஊழலற்ற புதிய இந்தியாவை உருவாக்கி வருகிறேன். மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 கடந்த 5 ஆண்டுகளாக இந்தியாவில் ஊழல் செய்தவர்கள் ஓடி ஒளியும் நிலை ஏற்பட்டுள்ளது. பாஜக அரசு ஊழல் செய்தவர்களுக்கு கடிவாளம் அமைக்கிறது. புதிய இந்தியாவில், தீவிரவாதம், ஊழல், குடும்ப ஆட்சி, மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களுக்கு எதிராக முன்னப்போதும் இல்லாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

பிரதமர் உரையாற்றி கொண்டிருக்கும்போது, அங்கிருந்த தமிழர்கள் மோடி….மோடி… ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் என முழக்கம் எழுப்பியதால் யுனெஸ்கோ அரங்கமே அதிர்ந்தது.