“இது கொரானாவை விட கொடுமையால்ல இருக்கு “நண்பருக்கு கொரானா இருப்பதாக  வதந்தி பரப்பியோர் கைது ..

 

“இது கொரானாவை விட கொடுமையால்ல இருக்கு “நண்பருக்கு கொரானா இருப்பதாக  வதந்தி பரப்பியோர் கைது ..

பெங்களூருவின் ஒரு பிரபலமான கல்லூரியில் படிக்கும் சில மாணவர்கள் தங்களின் நண்பரின் போட்டோவை வைத்து அவருக்கு தெரியாமல் இவருக்கு கொரானா பாசிட்டிவ் என்று சமூக ஊடகங்களில் செய்தி பரப்பினார்கள் .இதை பார்த்த அதிகாரிகள் அந்த கல்லூரிக்கு போய் அந்த மாணவரை தேடி அவரை விசாரித்த போது, தான் ஆரோக்கியமாக இருப்பதாகவும் யாரோ சிலர் செய்த சதி வேலையென்று கூறினார்

பெங்களூருவில் சிலர் கொரானா பற்றி வதந்திகள் பரப்புவதாக வந்த தகவலையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் மூவர் கைது செய்யப்பட்டனர் .
பெங்களூருவின் ஒரு பிரபலமான கல்லூரியில் படிக்கும் சில மாணவர்கள் தங்களின் நண்பரின் போட்டோவை வைத்து அவருக்கு தெரியாமல் இவருக்கு கொரானா பாசிட்டிவ் என்று சமூக ஊடகங்களில் செய்தி பரப்பினார்கள். இதை பார்த்த அதிகாரிகள் அந்த கல்லூரிக்கு போய் அந்த மாணவரை தேடி அவரை விசாரித்த போது, தான் ஆரோக்கியமாக இருப்பதாகவும் யாரோ சிலர் செய்த சதி வேலையென்று கூறினார், பிறகு விசாரித்ததில் அது அவரின் நணபர்களின் ஏமாற்று வேலை செய்து விளையாடியுள்ளனர் என்று தெரிந்து கொண்ட போலீசார் அவரை கைது செய்தனர் .
மேலும் அங்கு சிலர் ஒரு தம்பதியின் போட்டோவை வைத்து அவர்களுக்கு கொரானா என்று போலியான செய்திகளை பரப்பியுள்ளனர். அந்த தம்பதியை போலீஸ் விசாரித்ததில் அதுவும் போலி செய்தி என்று அறிந்த போலீஸ் அதை பரப்பிய சில விஷமிகளை கைது செய்தனர். மேலும் இதுபோல போலியான செய்திகளை பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுப்போமென பெங்களூரு போலீஸ் கமிஷனர்  கூறினார் .