இது கூட தெரியாமல் பா.ஜ.க கட்சி நடத்துகிறது : ஜோதிமணி ட்வீட் !

 

இது கூட தெரியாமல் பா.ஜ.க கட்சி நடத்துகிறது : ஜோதிமணி ட்வீட் !

நாட்டின் முதல் மிகப்பெரும் ஊழலாம் போபர்ஸ் ஊழல் செய்து தலைகுனிவை ஏற்படுத்திய சோனியா காந்தியின் சேவையை மக்கள் புறக்கணித்ததை நினைவு கூறும் நாள் இன்று.

இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளையொட்டி அனைவரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அதே போல, ஜோதிமணியும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், ” தைரியம், நம்பிக்கை, இரக்கம், கண்ணியம் மற்றும் கருணை ஆகியவற்றின் உருவகம் தான் சோனியா காந்தி. உணவு பாதுகாப்பு சட்டம், தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதம் போன்ற அவரது முதன்மை திட்டங்கள் வை மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்தது. ஆண் ஆதிக்க அரசியலில் காங்கிரஸ் ஜனாதிபதியாக நீண்ட காலம் பணியாற்றியவர்” என்று பதிவிட்டிருந்தார். 

 

பா.ஜ.க அதன் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில், “நாட்டின் முதல் மிகப்பெரும் ஊழலாம் போபர்ஸ் ஊழல் செய்து தலைகுனிவை ஏற்படுத்திய சோனியா காந்தியின் சேவையை மக்கள் புறக்கணித்ததை நினைவு கூறும் நாள் இன்று.” என்று சோனியா காந்தி பற்றி பதிவிட்டிருந்தது.

 

இதற்குப் பதில் அளித்த ஜோதிமணி, ” போபர்ஸ் வழக்கில் எவ்வித தவறும் நடக்கவில்லை என்ற நீதிமன்ற உத்தரவை ஏற்றுக்கொண்டு,மேல் முறையீடு செய்வதில்லை என்று வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. இதுகூட தெரியாமல் ஒரு கட்சி!” என்று பதிவிட்டுள்ளார்.