இது காலத்தின் கட்டாயம்: அமைச்சர் ஜெயக்குமார்

 

இது காலத்தின் கட்டாயம்: அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் பிளாஸ்டிக்குக்கு தடை விதிப்பது காலத்தின் கட்டாயம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னை: தமிழகத்தில் பிளாஸ்டிக்குக்கு தடை விதிப்பது காலத்தின் கட்டாயம் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பிளாஸ்டிக்குகளுக்கு ஜனவரி 1-ம் தேதியில் இருந்து தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் வருகிற ஜனவரி மாதம் 1-ம் தேதி முதல் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட சில பிளாஸ்டிக்குகளுக்கு தடைவிதிக்கக்கூடாது என சில அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிப்புக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது என்றார்.