இது என்னடா புது புரளியா இருக்கு: நல்லவர்கள் ஆட்சியினால் தான் தமிழகத்தில் மழை பொழிகிறது: அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு!

 

இது என்னடா புது புரளியா இருக்கு: நல்லவர்கள் ஆட்சியினால் தான் தமிழகத்தில் மழை பொழிகிறது: அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு!

தமிழகத்தில் நல்லவர்கள் ஆட்சி புரிவதால்தான் தினமும் மழை பெய்கிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபி செட்டிபாளைம் : தமிழகத்தில் நல்லவர்கள் ஆட்சி புரிவதால்தான் தினமும் மழை பெய்கிறது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபி செட்டிபாளையத்தில் அதிமுக கட்சியின் சார்பில் நடைபெற்ற 47ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ‘திமுக கட்சியை போல் அதிமுக குடும்ப அரசியல் கட்சி அல்ல. அதிமுக கட்சி உடைந்தாகக் கூறப்படும் ஸ்டாலின் திமுகவிலிருந்து அழகிரி விலகியிருப்பதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார். அதிமுக கட்சியைப்போல் அனைத்து தொகுதிகளிலும் கூட்டணி இல்லாமல் தனித்து போட்டியிட திமுகவிற்கு தைரியம் உள்ளதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

‘அதிமுகவிலிருந்து விலகியவர்களை பற்றி கவலையில்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு அதிமுக கட்சி தொடர்ந்து சிறப்பான முறையில் செயல்படும். திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய தொகுதி இடைத்தேர்தல்களில் அதிமுக அமோக வெற்றிபெறும். சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பொற்கால ஆட்சி போல் தற்போது நடைபெறும் அதிமுக அரசில் நல்லவர்கள் ஆட்சி புாிகின்றனா். அதனால் தான் தினமும் மழை பொழிகிறது’ என்று கூறியுள்ளார்.