இது இன்னும் எவ்வளவு நாளைக்குதான் தொடரும்? பிரியங்கா காந்தி ஆவேசம்…

 

இது இன்னும் எவ்வளவு நாளைக்குதான் தொடரும்? பிரியங்கா காந்தி ஆவேசம்…

ராகுல் காந்தியிடம் காஷ்மீர் பெண் ஒருவர் கண்ணீருடன் தங்களது கஷ்டங்களை கூறும் வீடியோவை வெளியிட்டு, இது இன்னும் எவ்வளவு நாளைக்குதான் தொடரும்? என பிரியங்கா காந்தி டிவிட் செய்துள்ளார்.

காஷ்மீர் நிலவரத்தை அறிந்து கொள்வதற்காக ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த சில தலைவர்கள் நேற்று ஸ்ரீநகருக்கு விமானத்தில் சென்றனர். ஆனால் காஷ்மீர் அரசு நிர்வாகம் அவர்களை விமான நிலையத்தை விட்டு வெளியேற அனுமதி அளிக்கவில்லை. மேலும் அவர்களை டெல்லிக்கு திருப்பி அனுப்பியது. ஸ்ரீநகரிலிருந்து டெல்லிக்கு விமானத்தில் திரும்பும்போது, விமானத்தில் காஷ்மீர் பெண் ஒருவர் தாங்கள் சந்திக்கும் துயரங்களை ராகுல் காந்தியிடம் கண்ணீர் மல்க கூறினார். தற்போது இன்டர்நெட்டில் தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

ராகுலிடம் பேசிய காஷ்மீர் பெண்

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வதேரா அந்த வீடியோவை தனது டிவிட்டரில் வெளியிட்டு மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரியங்கா காந்தி டிவிட்டரில், இன்னும் எவ்வளவு நாளைக்கு இது தொடரும்? தேசியவாதம் என்ற பெயரில் பேசவிடாமல் மற்றும் நசுக்கப்பட்ட லட்சக்கணக்கான மக்களில் ஒருவருவது குரல் வெளியே வந்துள்ளது. எதிர்க்கட்சிகள் இந்த  விஷயத்தை அரசியல் ஆக்குகிறார்கள் என்று குற்றம் சாட்டுபவர்களுக்காக.

மோடி

காஷ்மீரில் நடக்கும் அனைத்து ஜனநாயக உரிமைகளும் மறுக்கபடுவதை காட்டிலும் அதிகமான அரசியல் மற்றும் தேச விரோதம் எதுவும் இல்லை. இதற்கு எதிராக குரல் கொடுப்பது ஒவ்வொருவரின் கடமை, இதனை நாம் நிறுத்த கூடாது. என பதிவு செய்து இருந்தார்.