இதுவரை காணாத மெகா சைஸ் பலாப்பழம்: கின்னஸ் சாதனைக்கு ரெடியான கேரள விவசாயி!

 

இதுவரை காணாத மெகா சைஸ் பலாப்பழம்:  கின்னஸ் சாதனைக்கு ரெடியான கேரள விவசாயி!

 இந்தியாவின் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் கின்னஸ் சாதனைகளுக்கு விண்ணப்பித்துள்ளார்.

கேரள மாநிலம் கொல்லம் அருகே  எடமுலக்கல் பகுதியை சேர்ந்தவர் விவசாயி ஜான்குட்டி. இவரது தோட்டத்தில் உலகின் கனமான மற்றும் மிக நீளமான பலாப்பழம் ஒன்று காய்த்துள்ளது.  இது 97 சென்டிமீட்டர் நீளமும் 51.5 கிலோ எடையும் கொண்டதாகும்.   எனவே விவசாயி ஜான்குட்டி  இந்தியாவின் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் கின்னஸ் சாதனைகளுக்கு விண்ணப்பித்துள்ளார்.

ff

இது கூறும்  ஜான்குட்டி, “என் நண்பர்கள் தான் கின்னஸ் சாதனைக்கு விண்ணப்பிக்க கூறினார்கள். ஏற்கனவே  புனேவில்  கனமான பலாப்பழம் ஒன்று 42.72 கிலோ எடையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.  எனவே, நான் கின்னஸ் உலக சாதனைக்கும் லிம்கா புத்தகத்திற்கும் விண்ணப்பித்துள்ளேன்” என்றார்.

dd

எனவே  கேரள விவசாயியும் அவரது குடும்பத்தினரும் இந்தப் பலாப்பழத்தின் மூலம் புதிய உலக சாதனை படைப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.