இதுதான் கடவுள் கொடுத்த வரம்: சௌந்தர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி!
சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவருடன் மகன் விளையாடும் புகைப்படத்தைத் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சென்னை: சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவருடன் மகன் விளையாடும் புகைப்படத்தைத் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தியின் இளையமகள் சௌந்தர்யாவுக்கும் தொழில் அதிபர் மகனும் நடிகருமான விசாகனுக்கும் கடந்த மாதம் 11ந்தேதி சென்னையில் உள்ள எம்.ஆர்.சி நகரில் பிரபல நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் புதிய தம்பதிகள் மகிழ்ச்சிகரமாக குடும்ப வாழ்க்கையைத் தொடங்கி உள்ள நிலையில் சௌந்தர்யா சற்றுமுன் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அதில் சௌந்தர்யாவின் கணவர் விசாகனும், சௌந்தர்யாவின் மகன் வேதிக்கும் மகிழ்ச்சியாக விளையாடுகின்றனர். அந்த பதிவில் அவர் கூறியதாவது,’ இதுதான் கடவுளின் ஆசீர்வாதம், இருவரும் எனது உயிர்கள்’ என்று அதில் பதிவிட்டுள்ளார்.
… And that’s what a #Blessing looks like ❤️❤️❤️❤️???????????? #MyBoys #MyLife #Ved #Vishagan #Grateful #Blessed #GodsAreWithUs pic.twitter.com/7IxrmqyL0u
— soundarya rajnikanth (@soundaryaarajni) March 16, 2019