இதுக்கு மேல பேசுனா சாவு அடிச்சிடுவேன்: கவினிடம் அசிங்கப் பட்ட காக்கா கஸ்தூரி 

 

இதுக்கு மேல பேசுனா சாவு அடிச்சிடுவேன்: கவினிடம் அசிங்கப் பட்ட காக்கா கஸ்தூரி 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 3யில் வனிதா மீண்டும் நுழைந்த பிறகு வீட்டையே இரண்டாக்கிவிட்டார். எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை என்று சந்தோஷமாக இருந்த ஹவுஸ் மேட்ஸ் தற்போது எலியும், பூனையுமாக மாறியுள்ளனர். கடந்த இரண்டு நாட்களாக மதுமிதா, ஆண்கள் பெண்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு வைத்து வனிதா விரித்த வலையில் சிக்கி மக்கள் மத்தியில் வெறுப்பைச் சம்பாதித்துள்ளார். 

இந்த நிலையில் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஆண்கள் அணி கஸ்தூரியிடம் வாக்குவாதம் செய்வது போல் உள்ளது. அப்போது கஸ்தூரி பேசுவது பிடிக்காததால் கவின் தனது குழு நபர்களை உள்ளே அழைத்துச் செல்கிறார். 

ஆனால் அதை எல்லாம் கண்டுக்காமல் கஸ்தூரி மீண்டும் சாண்டியிடம் பேச செல்கிறார். அதற்குக் கவின், ‘நீங்க எங்க அண்ணாவ கேஸ்’ல மாட்டிவிடுவிங்க. உங்க கிட்ட பேச எங்களுக்கு விருப்பம் இல்லை’ என்று கூறுகிறார். அதற்கு பதிலளித்த கஸ்தூரி, ‘நீங்க 4பேர் கிட்ட பேசியிருக்க கூடாது என்று சொல்ல’ உடனே கடுப்பான கவின், ‘4பெரும் என்னிடம் பிடித்து தான் பேசினார்கள். இதற்கு மேல் இதைப் பற்றி பேசுனா சாவு அடிச்சிடுவேன்’ என்று கூறியுள்ளார். 

முன்னதாக கவின், கஸ்தூரி செய்வது பிடிக்கவில்லை என்றும் அவரை காக்க என்று சொல்லிக் கலாய்த்தது குறிப்பிடத்தக்கது.