இதற்கு முதலில் அனைவரும் ஒத்துழையுங்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்

 

இதற்கு முதலில் அனைவரும் ஒத்துழையுங்கள்: பொன்.ராதாகிருஷ்ணன்

பிளாஸ்டிக் தடைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சென்னை: பிளாஸ்டிக் தடைக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பிளாஸ்டிக்குகளுக்கு தமிழக அரசு இன்று முதல் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் 14 வகையான பிளாஸ்டிக் பைகள் மற்றும் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் குறிப்பிட்ட சில பிளாஸ்டிக்குகளுக்கு தடைவிதிக்கக்கூடாது என சில அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இதுகுறித்து கூறுகையில், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்த கூடியது. நீர்நிலை, விவசாயம் ஆகியவற்றுக்கு பாதிப்பு தரக்கூடியது. அதை தடுக்க பல நடவடிக்கைகள் எடுத்தும் தடுக்க முடியாததால் தான் அரசு இந்த நடவடிக்கையை எடுத்து உள்ளது. பிளாஸ்டிக் தடையை எதிர்த்து போராட்டம் நடத்துவது தேவையற்றது. இதை புரிந்துகொண்டு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.