இண்டிகோ விமானத்தில் இயந்திரக் கோளாறு.. கடைசி நேரத்தில் உயிர் தப்பிய 172 பயணிகள் !

 

இண்டிகோ விமானத்தில் இயந்திரக் கோளாறு.. கடைசி நேரத்தில் உயிர் தப்பிய 172 பயணிகள் !

சென்னை விமான நிலையத்தில் இருந்து  இண்டிகோ விமானம் மத்தியப் பிரதேச இந்தூர் நகருக்கு நேற்று மாலை 5.20 மணிக்குப் புறப்படத் தயாராக இருந்துள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து  இண்டிகோ விமானம் மத்தியப் பிரதேச இந்தூர் நகருக்கு நேற்று மாலை 5.20 மணிக்குப் புறப்படத் தயாராக இருந்துள்ளது. அதில், 172 பயணிகள் மற்றும் 6 ஊழியர்கள் என 178 பேர் பயணிக்க இருந்துள்ளனர். விமானம் புறப்படத் தயாராக இருந்த போது, அதில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கடைசி நேரத்தில் கண்டுபிடித்துள்ளார். 

ttn

இதனையடுத்து, விமானத்தில் இருந்த அனைவரும் கீழே இறக்கப்பட்டு விமான பொறியாளர்களைக் கொண்டு விமானத்தைச் சரி செய்ய முற்பட்டுள்ளனர். ஆனால், அது தாமதம் ஆனதால் மாற்று விமானம் மூலம் பயணிகள் இந்தூர் நகருக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அந்த மாற்று விமானம், விமான நிலையத்தில் இருந்து இரவு 9 மணிக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது. விமானத்தில் ஏற்பட்ட கோளாறு உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால்  172 பயணிகள் உயிர் தப்பினர்.