இணையத்தில் ஆர்டர் செய்யும் உணவுகளை மட்டுமே சாப்பிடும் தெரு நாய் 

 

இணையத்தில் ஆர்டர் செய்யும் உணவுகளை மட்டுமே சாப்பிடும் தெரு நாய் 

கேரளாவிலுள்ள உள்ள தெரு நாய் ஒன்றுக்கும் தினமும் இணையத்தில் உணவு ஆர்டர் செய்து அதற்கு உணவளித்துவருகிறார் ஒரு வித்தியாசமான நபர்.

திருவனந்தபுரம் மாவட்டம் காவடியார் பகுதியை சேர்ந்தவர் வர்கீஸ் உம்மன். சுற்றுலா வழிகாட்டியாக பணிபுரிந்துவரும் உம்மன் கடந்த 2 ஆண்டுகளாக ஷேடோ என்ற தெரு நாயை தத்தெடுத்து வளர்த்துவருகிறார். வேலை நிமித்தடமாக உம்மன் பல்வேறு ஊர்களுக்கு செல்ல வேண்டிருந்தததால் ஷேடோவுக்குஇணையம் வழியாக உணவு ஆர்டர் செய்து கொடுத்துவந்துள்ளார்.

shadow

டெலிவரி பாயிடம் ஷேடோவை பற்றி விவரமாக சொல்லிவிட்டு அதற்கு உணவளிக்குமாறு வர்கீஸ் அறிவுறுத்துகிறார். அவர்களும் ஷேடோவிற்கு உணவை வழங்கிவிட்டு சென்றுவிடுவார்கள் அதற்கான தொகையை இணையம் வழி செலுத்திவிடுவாராம் வர்கீஸ்.  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கேரளாவில் பெய்த கனமழையால் சிக்கியா ஷேடோவை, வர்கீசின் மகன்கள்தான் வீட்டிற்கு அழைத்துவந்துள்ளனர்.