இணையதளங்கள் தான் பாலியல் குற்றங்களுக்கு காரணம் : நடிகர் விவேக் ஓபன் டாக்!

 

இணையதளங்கள் தான் பாலியல் குற்றங்களுக்கு காரணம் : நடிகர் விவேக் ஓபன் டாக்!

இளைஞர்கள் மொபைல் மற்றும் இன்டர்நெட்டை அதிகம் பயன்படுத்துவதால்தான் பாலியல் குற்ற சம்பவங்கள் நடைபெறுகிறது என்று நடிகர் விவேக் கூறியுள்ளார்.

சென்னை: இளைஞர்கள் மொபைல் மற்றும் இன்டர்நெட்டை அதிகம் பயன்படுத்துவதால்தான் பாலியல் குற்ற சம்பவங்கள் நடைபெறுகிறது என்று நடிகர் விவேக் கூறியுள்ளார்.

விவேகானந்தரின் 156-வது பிறந்தநாள் நிகழ்ச்சி சென்னை மெரினாவில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அப்போது அந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட  நடிகர் விவேக், பல்வேறு பள்ளிகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசு மற்றும் சான்றிதழ்களை விவேக் வழங்கிச் சிறப்பித்தார்.

vivek

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ‘என்னுடைய வாழ்வில் விவேகானந்தரை எடுத்துக்காட்டாய் வைத்துத் தான் வாழ்ந்து வருகிறேன். உதவி என்பது வெளியில் இருந்து வருவதில்லை உன்னுள் இருந்து வருகிறது என்பது விவேகானந்தரின் கூற்றாகும். இதுவரை, நாடு முழுவதும் 30 லட்சத்து 23 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டுள்ளேன். இந்தப் பயணம் தொடரும். விவேகானந்தரின் காலத்தில் பெண்களைத் தாயாக பார்த்தனர். ஆனால் தற்போது இளைஞர்கள் மொபைல் இன்டர்நெட் மூலம் தங்கள் வயதைத் தாண்டி, தெரிந்து கொள்ளக் கூடாத விஷயங்களைத் தெரிந்து கொள்கின்றனர். இன்டர்நெட்டை தேவை அறிந்து பயன்படுத்தினால் பாலியல் குற்றங்கள் குறையும்’ என்றார்.