இடைத்தேர்தலுக்கு விருப்பமனு அளிக்கும் இடத்தை திடீரென மாற்றிய காங்கிரஸ்!

 

இடைத்தேர்தலுக்கு விருப்பமனு அளிக்கும் இடத்தை திடீரென மாற்றிய காங்கிரஸ்!

நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு விருப்பமனு அளிக்கும் இடம் மாற்றப்பட்டு உள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வசந்தகுமார் எம்பியாகி விட்டதால் அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் விக்கிரவாண்டி தொகுதி எம்எல்ஏ ராதாமணி மரணமடைந்ததையடுத்து அந்த தொகுதிக்கும் இடைத்தேர்தல்  நடக்கும் சூழல் ஏற்பட்டது. 

இந்நிலையில் காலியாகவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு வரும்  அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல்  நடக்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி செப்டம்பர் 23 ஆம் தேதி வேட்பு மனுத்தாக்கலும், செப்டம்பர் 30 ஆம் தேதி வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யக் கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல்  வேட்பு மனு மீதான  பரிசீலனை அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெறும் என்றும் இடைத்தேர்தல் முடிவுகள் வரும் 24 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

Congress

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், விருப்ப மனுக்களை சென்னையில் சத்யமூர்த்தி பவனில் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக திருநெல்வேலி கிழக்கு அலுவலகத்தில் விருப்ப மனுக்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.