இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் அவர்களோடு அமமுக இணையும்: தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு பேட்டி!

 

இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் அவர்களோடு அமமுக இணையும்: தங்க தமிழ்ச்செல்வன் பரபரப்பு பேட்டி!

சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக தோல்வியடைந்தால் அதிமுகவுடன் இணையத் தயார் என அம்மா மக்கள் முன்னேற்றக்கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

நெல்லை: சட்டமன்ற இடைத்தேர்தலில் அமமுக தோல்வியடைந்தால் அதிமுகவுடன் இணையத் தயார் என அம்மா மக்கள் முன்னேற்றக்கழக கொள்கை பரப்பு செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.

நெல்லையில் பேட்டி அளித்த தங்க தமிழ்ச்செல்வன், ‘மக்கள் அதிமுகவையும், திமுகவையும் விரும்பவில்லை. புதிய தலைமையை விரும்புகின்றனர். இடைத்தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளில் அமமுக வெற்றி பெறும்  எதிரிகளுக்கு இடம் கொடுக்காமல் அதிமுக திருந்தி வந்தால் அமமுக – அதிமுக இணைந்து பணியாற்றலாம் அது இருகட்சிகளுக்கும் பலம் தான்’ என்று தங்கதமிழ்செல்வன் கூறினார்.

 ‘இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றால் அவர்களோடு அமமுக இணையும் என்றும், தாங்கள் வெற்றி பெற்றால் அமமுகவுடன் அதிமுக இணையட்டும் என்றும் அமமுக வரவிருக்கும் சட்டமன்ற இடைத்தேர்தலை எதிர்கொள்ளத் தயாராக இருக்கிறது. ஏனென்றால் நடப்பாண்டில் நடைபெறும் அனைத்துச் செயல்களையும் மக்கள் கவனித்து வருகிறார்கள்’என்று குறிப்பிட்டுள்ளார்.

அதே நேரத்தில் அதிமுக – அமமுக என இரு அணிகளாக செயல்பட்டு வரும் அதிமுக ஒரே தலைமையின் இணைந்து செயல்படுவதற்கான பேச்சுவார்த்தை துவங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த சில நாட்களாகவே இது குறித்து பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில் கட்சியில் இல்லாத சிலரின் முயற்சியால் இணைப்பு சாத்தியாகும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.