இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக முதல்வர் பிரச்சாரம்…

 

இடைத்தேர்தலில் அதிமுக சார்பாக முதல்வர் பிரச்சாரம்…

தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்  அனைத்து பணிகளும் நிறைவடைந்து தேர்தலில் போட்டியிடப் போகும் வாக்காளர் பட்டியல்  நேற்று வெளியானது. 

விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதிகளில் அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்படத்தையடுத்து, தேர்தலுக்கான வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்  அனைத்து பணிகளும் நிறைவடைந்து தேர்தலில் போட்டியிடப் போகும் வாக்காளர் பட்டியல்  நேற்று வெளியானது. 

தற்போது, தேர்தலுக்கான பிரச்சாரங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின், விக்கிரவாண்டியில் திமுக சார்பாகப் போட்டியிடப் போகும் புகழேந்தியை ஆதரித்து வரும்  அக்டோபர் 3 முதல் 13  வரை 10 நாட்கள் பிரச்சாரம் செய்யப் போவதாக நேற்று அறிவிப்பு வெளியானது. 

Edapadi palanisamy

இந்நிலையில், அதிமுக சார்பாக விக்கிரவாண்டியில் போட்டியிடும் முத்தமிழ் செல்வனையும், நாங்குநேரியில் போட்டியிடும் ரெட்டியார்பட்டி வெ. நாராயணனையும் ஆதரித்து வரும்  அக்டோபர் 12 முதல் 18 வரை 6 நாட்களுக்கு, அந்தந்த தொகுதிகளில் அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்யப் போவதாக அக்கட்சியின் தலைமை தெரிவித்துள்ளது.