இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க முடியாது: புதிய தமிழகம் கட்சித் தலைவர் அறிவிப்பு..!

 

இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க முடியாது: புதிய தமிழகம் கட்சித் தலைவர் அறிவிப்பு..!

ஆதிதிராவிடர் இனப் பட்டியலில் உள்ள பண்ணாடி, காலாடி, கடையன் உள்ளிட்ட 6 பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

ஆதிதிராவிடர் இனப் பட்டியலில் உள்ள பண்ணாடி, காலாடி, கடையன் உள்ளிட்ட 6 பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று அறிவிக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால், இது குறித்து ஆளுங்கட்சியான அதிமுக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. 

Krishnasamy

இதனால், அண்மையில் நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலின் போது அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்த புதிய தமிழகம் கட்சி, இன்னும் சில நாட்களில் நடக்கவிருக்கும் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்காது என அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். 

இது குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, இன்று நடந்த கட்சியின் உயர்நிலை செயற்குழு கூட்டத்தில் புதிய தமிழகம் கட்சியின் அனைத்து உறுப்பினர்களும்  தேவேந்திர குல வேளாளர் என்று பட்டியலின மக்களை அறிவிக்காததால் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்க வேண்டாம் என்ற ஒருமித்த கருத்தை முன் வைத்ததால், அதனை ஏற்று வரும் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு புதிய தமிழகம் கட்சி ஆதரவு அளிக்காது என்று கூறியுள்ளார்.