இடித்தவன் விரலை ஒடித்து, துடிக்க செய்த நடிகை டாப்ஸி -பின்னால் தொட்டவனை புண்ணாக்கினார்
ஒரு நபர் பின்னால் இருந்து நடிகை டாப்ஸியை தொட முயன்ற ஒரு சம்பவத்தை டாப்ஸி பன்னு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவரித்துள்ளார்.
“நாங்கள் குருபுராபின் போது குருத்வாராவுக்குச் சென்றபோது அங்கு வெளியே கூட்டத்தால் ஸ்தம்பித்திருந்தது எனக்கு நினைவிருக்கிறது. அது மக்கள் எப்போதுமே ஒருவரோடொருவர் மோதிக் கொள்ளும் விதத்தில் கூட்டமாக இருக்கும் இடம்.
ஒரு நபர் பின்னால் இருந்து நடிகை டாப்ஸியை தொட முயன்ற ஒரு சம்பவத்தை டாப்ஸி பன்னு ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவரித்துள்ளார்.
“நாங்கள் குருபுராபின் போது குருத்வாராவுக்குச் சென்றபோது அங்கு வெளியே கூட்டத்தால் ஸ்தம்பித்திருந்தது எனக்கு நினைவிருக்கிறது. அது மக்கள் எப்போதுமே ஒருவரோடொருவர் மோதிக் கொள்ளும் விதத்தில் கூட்டமாக இருக்கும் இடம்.
அந்த கூட்டத்தில் நான் போனபோது ஒருவன் என் பின்புறத்தைத் தொட முயன்றான் .இந்த சம்பவத்திற்கு முன்பும் எனக்கு இதுபோல மோசமான அனுபவங்கள் இருந்தன. ஆனால் இந்த நேரத்தில், நான் அந்த கூட்டத்திற்குள் செல்லும்போது இதுபோன்ற ஏதாவது நடக்கும் என்று எனக்கு ஒரு உள்ளுணர்வு இருந்தது”.என்று நடிகை டாப்ஸி ,கரீனா கபூர் கானுடன் ,”பெண்களுக்கு என்ன வேண்டும் ”என்ற நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டார்.
டாப்ஸி தன்னை தற்காத்துக் கொள்ளும் அளவுக்கு தைரியமாக இருந்ததால் அவர் அவனுக்கு ஒரு படிப்பினையை தந்தார் .
“அவன் அந்த கூட்டத்தில் என் பின்னால் தொட முயன்றதும் நான் அவனது விரலைப் பிடித்து ,முறுக்கிவிட்டு அந்தப் பகுதியிலிருந்து வேகமாக நகர்ந்தேன், ”என்று அவர் மேலும் கூறினார்