இசை துறையில் கால் பதித்த யேசுதாஸ் குடும்பத்தின் அடுத்த வாரிசு!

 

இசை துறையில் கால் பதித்த யேசுதாஸ் குடும்பத்தின் அடுத்த வாரிசு!

கே.ஜே.யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸின் மகளான அமயா பாடிய ஷியாமாரகம் என்ற மலையாள படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

கே.ஜே.யேசுதாஸின் மகன் விஜய் யேசுதாஸின் மகளான அமயா பாடிய ஷியாமாரகம் என்ற மலையாள படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. 

சென்னை கிருஷ்ண கான சபாவில் நடைபெற்ற இந்த விழாவில்,  ஒய்.ஜி.மகேந்திரன், சுதா மகேந்திரன் ‘ இவர்களின் மகள் மதுவந்தி பின்னனி இசையமைத்த சரத், விஜய் யேசுதாஸ் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். யேசுதாஸ் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையான அமயாவும், தட்சிணாமூர்த்தியின் இசையில் பாடி அசத்தியிருக்கிறார்.

shyamambaram

விழாவில் பேசிய கே.ஜே. யேசுதாஸ், “இன்றும் பாடிக்கொண்டிருப்பது கடவுள் கொடுத்த வரபிரசாதம். என்றுமே குருவை மறக்கக்கூடாது. கர்நாடக இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து ஷியாமாரகம் படம் எடுக்கப்பட்டுள்ளது. நிச்சயம் இந்தப் படத்திற்கு விருதுகள் கிடைக்கும்” என்று கூறினார்.

shyamambaram

இதையடுத்து பேசிய ஒய்.ஜி.மகேந்திரன் பேசுகையில், ” ஷியாமாரகம் படத்தில் பாகவதராக நடித்திருக்கிறேன். இந்த வேடத்தில் நான் நடித்தால் சரியாக இருக்கும் என எனக்காக சிபாரிசு செய்தவர் யேசுதாச். எனக்காக இந்த படத்தில் ஒரு பாடலையும் பாடிக் கொடுத்துள்ளார்.  அதுவே எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம்” என்று கூறினார்.