இங்கிலாந்தை தாக்க தயாராகும் டென்னிஸ் புயல்…அச்சத்தில் மக்கள்!
புயலின் தாக்கம் குறைவதற்குள் தற்போது Dennis புயல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இங்கிலாந்து நாட்டில் கடந்த வார இறுதியில் சியாரா புயல் தாக்கியது. இதனால் அங்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு ராணுவ படைகளை அந்நாட்டு ராணுவ அமைச்சகம் குவித்தது. சியாரா புயலின் தாக்கம் குறைவதற்குள் தற்போது Dennis புயல் உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கடுமையான பாதிப்பினை ஏற்படுத்தும் வகையில் Dennis புயல் உருவாகியுள்ளது. காற்று வேகமுடன் வீசுதல் மற்றும் கடும் வெள்ளப்பெருக்கு ஆகியவற்றால் பொருட்சேதம் ஏற்படுவதுடன் சாலைகளும் மூடப்படும் சூழல் ஏற்படும் என்று அறிவித்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் இந்த அறிவிப்பால் மக்கள் பீதியில் உள்ளனர்.
அதேசமயம் புயலை எதிர்கொள்ளும் விதமாக ஆயுத படைகள், உள்ளூர் அதிகாரிகள் என பலரும் தயார் நிலையில் இருப்பதாக ராணுவ அமைச்சர் பென் வாலஸ் தெரிவித்துள்ளார்.