ஆஸ்திரேலியாவை பந்தாடிய இந்தியா! 36 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி!!
உலகக் கோப்பை தொடரின் 14வது லீக் போட்டி இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வருகிறது.
உலகக் கோப்பை தொடரின் 14வது லீக் போட்டி இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே நடைபெற்று வருகிறது. இதில் ஆஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 316 ரன்களை எடுத்து இந்தியாவிடம் சரணடைந்தது.
லண்டன் கென்னிங்டான் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 352 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இந்திய அணியில் ஷிகார் தவான் (117), விராட் கோலி (82), ரோகித் ஷர்மா (57) ரன்களை விளாசினர்.
இதனைத் தொடர்ந்து 353 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக வார்னர் மற்றும் பின்ச் ஆகியோர் களமிறங்கினர். வார்னரை விட, ஃபின்ச் இன்றைய ஆட்டத்தில் பட்டய கிளப்பினார். எனினும் 13ஆவது ஓவரில் பின்ச் ரன் அவுட்டானார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த வார்னர் மற்றும் ஸ்மித் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். ஆஸ்திரேலியாவின் ஸ்கோர் 133 என இருக்கும் போது வார்னர் 56 (84) ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் 200 ரன்கள் வரை ஆஸ்திரேலியா விக்கெட்டை இழக்கவில்லை. வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி ஆட்டத்தில் ரன்களை குவித்து ஆஸ்திரேலிய வெற்றிக்கு வித்திட்ட ஹீரோ கோல்டர் நைல், இன்று இந்தியாவுக்கு எதிராக பும்ராவின் ஆஃப் கட்டர் பந்தில் 4 ரன்களில் கேட்ச் ஆகி வெளியேறினார். அதன்பின் உஸ்மான் கவாஜா 42 ரன்களுடன் ஆட்டமிழந்தார். கேப்டன் ஆரோன் ஃபின்ச் 36 ரன்களில் ரன் அவுட் ஆனார். அதன்பின் ஆஸ்திரேலியா தனது ஆறாவது விக்கெட்டை இழந்து 244 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் நிதானத்தை இழந்த ஆஸ்திரேலியா அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து 316 ரன்களை எடுத்து இந்தியாவிடம் சரணடைந்தது.