ஆழ்வார்பேட்டை ஆண்டவரை தரிசித்த மலேசிய அமைச்சர்

 

ஆழ்வார்பேட்டை ஆண்டவரை தரிசித்த மலேசிய அமைச்சர்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை மலேசிய நாட்டின் மனிதவளத்துறை அமைச்சர் குலசேகரன் இன்று நேரில் சந்தித்தார்.

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை மலேசிய நாட்டின் மனிதவளத்துறை அமைச்சர் குலசேகரன் இன்று நேரில் சந்தித்தார்.

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். கட்சியில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வரும் அதேவேளையில் கமல் சுற்றுப்பயணம் செய்தும், கிராம சபை கூட்டங்களில் கலந்து கொண்டும் வருகிறார். மேலும் கமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்கியதும் அவரது செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் பலர் இருந்தனர். இருப்பினும் அவரது செயல்பாடுகள் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

இதனிடையே அவரை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட தேசிய அரசியல் கட்சி தலைவர்கள் சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது வெளிநாட்டு அமைச்சரான மலேசிய மனிதவளத்துறை அமைச்சர் குலசேகரன், ஆழ்வார்பேட்டையில் இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசனை சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.