ஆழ்த்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன்..!

 

ஆழ்த்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன்..!

ராஜஸ்தான் மாநிலத்தில் 4 வயது சிறுவன் ஆழ்த்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் 4 வயது சிறுவன் ஆழ்த்துளை கிணற்றில் விழுந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிரோகி பகுதியின் சிபோகான் கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் விளையாடிக்கொண்டிருந்தபோது தவறி ஆழ்த்துளை கிணற்றில் விழுந்தான். விழுந்த சில மணி நேரத்தில் 15 அடி ஆழத்திற்கு சென்ற சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. சிறுவனுக்கு தேவையான ஆக்ஸிஜன் மருத்துவ குழுவினர் அளித்துவருகின்றனர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற மீட்புப்படையினர் சிறுவனை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மருத்துவக்குழுவும், சிறுவனை மீட்பதற்கான உபகரணங்களும் இருப்பதால் கண்டிப்பாக உயிருடன் மீட்போம் என மீட்புப்படையினர் தெரிவித்தனர். சொன்னபடியே சுமார் 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சிறுவனை பத்திரமாக மீட்டனர்.

Borewell

கடந்த மாதம் இதேபோன்று தமிழகத்திலுள்ள திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் 3வயது சிறுவன் சுஜித் தவறி விழுந்த உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடதக்கது.