ஆளுநர் மாளிகையை சேர்ந்த தீணையப்பு நிலைய வீரருக்கு கொரோனாவா? – ஆளுநர் மாளிகை விளக்கம்

 

ஆளுநர் மாளிகையை சேர்ந்த தீணையப்பு நிலைய வீரருக்கு கொரோனாவா? – ஆளுநர் மாளிகை விளக்கம்

தீணையப்பு நிலைய வீரருக்கு கொரோனா என்ற செய்திக்கு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

சென்னை: தீணையப்பு நிலைய வீரருக்கு கொரோனா என்ற செய்திக்கு ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுநர் மாளிகையில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் பணிபுரிந்த வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. வெளியூர் சென்று வந்த நிலையில் அந்த தீணையப்பு நிலைய வீரருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டதாக கூறப்பட்டது.

Governor

இந்நிலையில், ஆளுநர் மாளிகை தீயணைப்பு பிரிவை சேர்ந்த வீரருக்கு கொரோனா தொற்று என்ற செய்தியை ஆளுநர் மாளிகை மறுத்துள்ளது. அவ்வாறு கொரோனா தொற்று உறுதியான வீரர் கடந்த 14-ஆம் தேதியே தி.நகர் பிரிவுக்கு மாற்றப்பட்டதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.