ஆளாளுக்கு கட்சி ஆரம்பிக்கிறார்கள்: இயக்குனர் கே.பாக்யராஜ்

 

ஆளாளுக்கு கட்சி ஆரம்பிக்கிறார்கள்: இயக்குனர் கே.பாக்யராஜ்

தேர்தல் நேரத்தில், அதுவும் ஆளுக்காள் கட்சி ஆரம்பித்திருக்கும் இந்த நேரத்தில் பொருத்தமான படமாக வந்திருக்கிறது

இயக்குனர் பகவதிபாலா இயக்கும் புதிய படம் ‘ஆளில்லாத ஊரில் அண்ணன்தான் எம்.எல்.ஏ.’ இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடந்தது.

விழாவில் கலந்து கொண்ட கே.பாக்யராஜ பேசும்போது, இந்த தலைப்பை பார்த்தவுடனே தேர்தல் நேரத்தில், அதுவும் ஆளுக்காள் கட்சி ஆரம்பித்திருக்கும் இந்த நேரத்தில் பொருத்தமான படமாக வந்திருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன். அப்புறம் என்னுடைய நண்பன் ஆர்.சுந்தர்ராஜான் நடித்திருப்பதால், அந்த எம்.எல்.ஏ. கண்டிப்பாக அவராக தானிருக்கும் என்று முடிவு செய்துகொண்டேன். 

நான் ஊரில் இருந்து சினிமா வாய்ப்புக்காக சென்னை வந்தபோது, ‘டைரக்டர்’ அவினாசி மணியிடம் முந்தானை முடிச்சு கதை சொன்னேன். அவர் கதையை இடைவேளை வரைக்கும் கேட்டுவிட்டு கதையில் ஏதோ மிஸ்ஸிங் என்று சொன்னார். அப்புறம் நான் யோசித்து முடிவு செய்ததுதான் முந்தானை முடிச்சு படத்தின் இடவேளை காட்சி. முதலில் நான் ஊர்வசிக்கு தாலி கட்டுவது போல வைத்திருந்தேன். பிறகு தான் குழந்தையை தாண்டுவது போல மாற்றினேன். இப்படி நம்மை நாமே மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் கதை நன்றாக வரும் என்றார்.