ஆல்யா மானசாவை பிரிந்ததற்கு காரணம் யார் தெரியுமா? முன்னாள் காதலர் மானஸ் ஓபன் டாக்!

 

ஆல்யா மானசாவை பிரிந்ததற்கு காரணம் யார் தெரியுமா? முன்னாள் காதலர் மானஸ் ஓபன் டாக்!

எனக்கும் மானசாவுக்கும் இடையே ஏற்பட்ட விரிசலுக்கு நான் காரணம் கிடையாது என்று ஆல்யா மானசாவின் முன்னாள் காதலர் மானஸ் தெரிவித்துள்ளார். 

சென்னை: எனக்கும் மானசாவுக்கும் இடையே ஏற்பட்ட விரிசலுக்கு நான் காரணம் கிடையாது என்று ஆல்யா மானசாவின் முன்னாள் காதலர் மானஸ் தெரிவித்துள்ளார். 

‘ராஜா ராணி’ சீரியலில் நடித்து வரும் ஆல்யா மானசாவுக்கு ரசிகர்கள் ஏராளம்.சீரியலையும் தாண்டி அவரை இன்ஸ்டாகிராமில் 13 லட்சத்திற்கும் அதிகமானோர் பாலோ செய்து வருகின்றனர்.  அதற்கு முக்கியக் காரணம், அடிக்கடி அவர் வெளியிட்டு வரும் டப்ஸ்மாஷ் வீடியோக்கள் தான். முன்னதாக மானஸ் என்பவரைக் காதலித்து வந்த மானசா கருத்து வேறுபாட்டின் காரணமாக அவரைப் பிரிந்துள்ளார். 

இதற்கு முக்கிய காரணம் ராஜா ராணி சீரியலில் அவருடன் நடிக்கும் சஞ்சீவ் கார்த்திக் உடன்  மானசா  நெருக்கமாக இருந்ததே என்று கூறப்படுகிறது. சஞ்சீவ் கார்த்திக்கும் மானசாவும் நெருக்கமாக இருப்பது போன்ற புகைப்படங்களை மானசா அவ்வப்போது வெளியிட்டு வந்தார்.சமீபத்தில் சஞ்சீவ் மானசாவுக்கு மோதிரம் ஒன்று பரிசாக அளித்திருக்கும் வீடியோ ஒன்றும் வைரலானது.

இந்நிலையில்  ஆல்யா மானசாவின் முன்னாள் காதலர் மானஸ் தற்போது சுபிக்க்ஷா என்பவரைக் காதலித்து வருகிறார்.மானஸாவை போலவே இவரும் ஒரு நடன கலைஞர் தான். கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி ஒன்றாக புகைப்படம் எடுத்து  அதனை மானஸ்  தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், சமீபத்தில் சுபிக்க்ஷாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்ட மானஸ், என்னுடைய துணைவி என்று குறிப்பிட்டுள்ளார். 

இது குறித்து இணையதள ஊடகம் ஒன்றிற்குப் பேட்டி அளித்துள்ள அவர், ‘எனக்கும் மானசாவுக்கும் இடையே ஏற்பட்ட விரிசலுக்கு நான் காரணம் கிடையாது.அதனால் அது குறித்து பயப்படவோ, வெட்கப்படவோ மாட்டேன். நான் உண்மையாக இருந்தேன். கைமீறி போகும் போது அதைத் தடுக்க கூடாது. அப்படி தடுத்தா அது ரொம்ப நாளைக்கு நம்ம கூட இருக்காது. நான் சுபிக்க்ஷாவை விரைவில் திருமணம் செய்ய உள்ளேன்’ என்று கூறியுள்ளார்.