ஆலயங்களில் இறைவனை வழிபடும் முறைகள்.. இதையெல்லாம் செய்திருக்கிறீர்களா?

 

ஆலயங்களில் இறைவனை வழிபடும் முறைகள்.. இதையெல்லாம் செய்திருக்கிறீர்களா?

ஆன்மிகத்திற்கு பல்வேறு முகங்கள் உண்டு.ஒரே ஊருக்குச் செல்வதற்குப் பல வழிகள் இருப்பதைப் போல, இறைவனையும் பல்வேறு வகையில் வழிபடுகிறோம். அதில் கோயிலுக்குச் சென்று வழிபடுவதும் ஒன்று.

ஆன்மிகத்திற்கு பல்வேறு முகங்கள் உண்டு.ஒரே ஊருக்குச் செல்வதற்குப் பல வழிகள் இருப்பதைப் போல, இறைவனையும் பல்வேறு வகையில் வழிபடுகிறோம். அதில் கோயிலுக்குச் சென்று வழிபடுவதும் ஒன்று.

god

டாப் தமிழ் நியூஸில், இந்தக் கட்டுரையைப் படித்துக் கொண்டிருப்பவர்களில் எத்தனைப் பேர் தினந்தோறும், சோம்பல் இன்றி நடைப்பயிற்சியை மேற்கொள்கிறீர்கள்? இன்று நகரை அழகுப்படுத்த ஆங்காங்கே உருவாகி வரும் பூங்காங்களில், சில இடங்களில் மட்டும் நடைப்பயிற்சிக்கென கூழாங்கற்களை பதித்திருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.. கோயில் பிரகாரத்தை வலம் வருவதும் நடைப்பயிற்சி தானே.. அதுவும் வெறும் கால்களில் நடந்தால், அதன் பலனைச் சொல்லவும் வேண்டுமா?

worship

ஆலயங்களில், இறைவனை வழிப்படும் முறைகளை பெரியவர்கள் வகுத்து வைத்திருக்கிறார்கள். இதையெல்லாம் எப்பொழுதாவது நாம் கவனித்திருக்கிறோமா?
ஆலயங்களுக்கு, இறைவனை வழிப்படச் செல்லும் போது வெறும் நெற்றியோடு செல்லக் கூடாது. கண்டிப்பாக குளித்துவிட்டு, நெற்றியில் விபூதி, குங்குமம் அல்லது சந்தனம் தரித்துதான் செல்ல  வேண்டும்.
ஆலயத்தில் இருக்கும் கொடி மரத்தை எக்காரணம் கொண்டும் தொட்டு வணங்கக் கூடாது. கொடிமரத்துக்கு பின்னால், கீழே விழுந்து தான் வணங்க வேண்டும். 

worship

கடவுளைத் தரிசிக்கும் போது, நம் பார்வை முதலில் பாதத்தைத் தான் தரிசனம் செய்ய வேண்டும். பாத தரிசனத்தை மனதில் நிறுத்தியபின் தான் முகத்தை தரிசனம்  செய்ய வேண்டும்.
பூ, சந்தனம், விபூதி போன்ற பிரசாதங்களை இரு கை நீட்டி வாங்கிக்கொள்ளவேண்டும். அப்படி நாம் வாங்குகிற விபூதி, குங்குமம் போன்றவை, நம் கையை விட்டு கீழே சிந்தாமல், சிதறாமல்  பார்த்துக் கொள்ள வேண்டும்.
பிரசாதங்களை வலது கையில் தான் வாங்க வேண்டும். அப்படி வலது கையால் வாங்குகிற பிரசாதங்களை இடது கைக்கு மாற்றி, வலது கையால் பயன்படுத்தலாம். 
நீங்கள் கடவுளை வணங்கும் பொழுது, உள்ளே எண்ணெய்யால் ஏற்றப்பட்ட ஒரு விளக்காவது எரிந்துக் கொண்டிருக்க வேண்டும். உள்ளே விளக்கு எரியாமல் இருக்கும் பொழுது வணங்கக் கூடாது.

worship

அபிஷேகம் நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் பொழுதோ, அலங்காரத்திற்காக திரை போடப்பட்டிருக்கும் பொழுதோ, நமக்கு அவசரம் என்று ஆலயத்தைச் சுற்றி வரக் கூடாது. 
ஆலயங்களில், கொடிமரத்தின் கீழ் மட்டும் தான் விழுந்து வணங்குதல் வேண்டும்.
இதையெல்லாம் அடுத்த முறை ஆலயங்களுக்குச் செல்லும் பொழுது நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.