ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கினர்! 7 பேர் பலி
Sep 15, 2019, 16:58 IST1568546883000
ஆந்திரா மாநிலம் தேவிபட்டணம் பகுதியில் கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு கவிழ்ந்ததில் 33 பேர் நீரில் மூழ்கினர். அதில் 7 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம தேவிபட்டணம் பகுதியில் உள்ள கோதாவரி ஆற்றில் சுற்றுலா படகு ஒன்றில் 60 பேர் பயணம் செய்தனர். அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றியதால் படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது, இதில் படகிலிருந்த 60 பேரும் நீரில் மூழ்கினர். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த மீட்புப்படையினர் தத்தளித்துக்கொண்டிருந்த 27 பேரை பத்திரமாக மீட்டனர். மேலும் ஆற்றில் மூழ்கிய 33 பேரை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக தேடினர். அவர்களில் 7 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்