‘ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம்’…போதை ஆசாமிகள் மீது கொடுக்கப்பட்ட புகார்.. பரபரப்பு சம்பவம்!

 

‘ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணிடம் சில்மிஷம்’…போதை ஆசாமிகள் மீது கொடுக்கப்பட்ட புகார்.. பரபரப்பு சம்பவம்!

அவரையும் அவர் குழந்தைகளையும் ஆற்றில் எட்டி உதைத்து விட்டு அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.

கரூர் மாவட்டம், குளித்தலை பெரிய பாலம் அருகே இருக்கும் மலையப்ப நகர் என்னும் பகுதியை சேர்ந்தவர கீதா. இவர் தன் 4 குழந்தைகளுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது மது அருந்திவிட்டு அந்த வழியே சென்ற இளைஞர்கள் 2 பேர், ஆற்றில் இறங்கி கீதாவிடம் சில்மிஷம் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கீதா, அந்த இளைஞர்களை அங்கிருந்து செல்லுமாறு திட்டியதால், அவரையும் அவர் குழந்தைகளையும் ஆற்றில் எட்டி உதைத்து விட்டு அவர்கள் அங்கிருந்து சென்றுள்ளனர்.

ttn

இளைஞர்களின் அந்த செயலால் கடும் கோபத்தில் இருந்த கீதா, குழந்தைகளை வீட்டில் விட்டு விட்டு நேராக மாதுபான கடைக்கு சென்று, உங்களால் தான் நிம்மதியே இல்லை. மதுக்கடைகளை மூடுங்கள் என்று சத்தம் போட்டுள்ளார். இது அங்கிருந்து நபர்களிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் பின்னர், காவல் நிலையத்துக்கு சென்ற கீதா இளைஞர்கள் மதுபோதையில் தன்னை எட்டி உதைத்து விட்டதாக புகார் அளித்துள்ளார். 

ஆனால், அப்போது காவலர்கள் எல்லாரும் மதுக்கடைகளில் பாதுகாப்பு பணிக்கு சென்று விட்டதால் கீதாவை மாலை வருமாறு அங்கிருந்த போலீசார் கூறியுள்ளனர். இதனிடையே அந்த இளைஞர்களால் எட்டி உதைக்கப்பட்ட கீதாவுக்கு வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து, அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.