ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக பொங்கிய இயக்குநர் ரஞ்சித்!

 

ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக பொங்கிய இயக்குநர் ரஞ்சித்!

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றம் என்பது திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை என்று தி.மு.க எம்.பி அர்.எஸ்.பாரதி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், ஊடகவியலாளர்களையும் அவதூறாக விமர்சித்துப் பேசியிருந்தார் ஆர்.எஸ்.பாரதி.

தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றம் என்பது திராவிட இயக்கங்கள் போட்ட பிச்சை என்று தி.மு.க எம்.பி அர்.எஸ்.பாரதி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், ஊடகவியலாளர்களையும் அவதூறாக விமர்சித்துப் பேசியிருந்தார் ஆர்.எஸ்.பாரதி. இது சர்ச்சையை ஏற்படுத்தவே, மன்னிப்பும் கேட்டார்.

rs-bharathi

இந்த நிலையில் சினிமா இயக்குநர் ரஞ்சித், தி.மு.க-வின் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான தன்னுடைய கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில், “பார்ப்பனிய வர்ண அடுக்குகளுக்கு எதிராக அயோத்திதாசர் தொடங்கிய திராவிட, தமிழ் உணர்வின் தொடர்ச்சியில் பெரியாரும் முன்னெடுத்த சாதி எதிர்ப்பு திராவிட கொள்கைகளால் ஆட்சிக்கு வந்த பலர் இன்று பெரியாரையும் மறந்து(மறுத்து) விட்டார்கள் என்பதையே சமீபத்திய நிகழ்வுகள்  நமக்கு உணர்ந்துகின்றன!

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொன்ன வள்ளுவன் தொடங்கி அயோத்தி தாசர், ரெட்டைமலை சீனிவாசன், எல்.சி குருசாமி, எம்.சி ராஜா,புரட்சியாளர் அம்பேத்கர்,  சிவராஜ், மீனாம்பாள், சத்தியவாணிமுத்து இன்னும் எத்தனை எத்தனையோ பெயர் தெரியாத போராளிகளின் உழைப்பின் பயனாக பெற்ற உரிமையை.
அவர்களின் போராட்ட வரலாற்றை மறுத்து பிச்சை என்று சொல்லும் சிந்தனையிலிருந்து வெளியே வாருங்கள்.  பெரியார் பார்வையை மறந்து விட்ட உங்களுக்கு அவரிடமிருந்து கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. முன்னோடிகளை படமாக ஆக்கி அஞ்சலி செலுத்துவதை விட , முதலில் அவர்களை கருத்தில் இருத்த பழகுங்கள்” என்று கூறியுள்ளார்.