ஆர்.எஸ்.எஸ்-க்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை… மோகன் பகவத் சொல்கிறார்
Jan 18, 2020, 17:11 IST1579347684000
ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை. நாங்கள் நாட்டில் வாழும் 130 கோடி மக்களுக்காக உழைக்கிறோம் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் அரசியலுக்கும் தொடர்பில்லை. நாங்கள் நாட்டில் வாழும் 130 கோடி மக்களுக்காக உழைக்கிறோம் என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
உத்தரப்பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களுக்கான நான்கு நாள் கருத்தரங்கம் நடக்கிறது. இதில் பங்கேற்று மோகன் பகவத் பேசினார். அப்போது, “தேர்தல் என்பது எங்களைப் பொருத்தவரை ஒன்றும் இல்லை.
நாட்டின் மதிப்பீடுகளைப் பாதுகாக்க கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக நாங்கள் உழைத்துக்கொண்டிருக்கிறோம். பாரதிய ஜனதா கட்சியை ரிமோட் கண்ட்ரோல் மூலம் ஆர்.எஸ்.எஸ் இயக்குகிறது என்று கூறுவது தவறு” என்றார்.