ஆரூயிர் நண்பருக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த இளைஞர் கைது!

 

ஆரூயிர்  நண்பருக்கு கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்த இளைஞர் கைது!

சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார்

மதுரை: அனுமதியின்றி நினைவு அஞ்சலி பேனர் வைத்த  இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தார். இந்த சம்பவத்தால்  அரசியல் கட்சிகள் மற்றும் நடிகர்களும்   எந்த நிகழ்ச்சிகளுக்கும் பேனர் வைக்கக் கூடாது என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் அனுமதி இன்றி வைக்கப்பட்டுள்ள பேனர்களை அந்தந்த மாநகராட்சி அகற்றி வருகிறது. 

banner

இந்நிலையில் மதுரை கோரிப்பாளையத்தில்  பள்ளிவாசல் தெருவில் ரவி என்பவருக்குச் சீனிவாசன் என்பவர் கண்ணீர் அஞ்சலி பேனர் வைத்திருந்தார். அதில் ஆரூயிர்   நண்பன் ரவிக்கு முதலாம் ஆண்டு கண்ணீர் அஞ்சலி என்ற வாசகம் இடம்பெற்றிருந்தது. இதுகுறித்து  தல்லாகுளம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. 

arrested

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள், அனுமதியின்றி  பேனர் வைத்த குற்றத்திற்காகச் சீனிவாசனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.