ஆயுளுக்கும் வம்சம் செழிப்பா வாழும் | நடிகர் சூரிக்கு உருக்கமான வாழ்த்து!

 

ஆயுளுக்கும் வம்சம் செழிப்பா வாழும் | நடிகர் சூரிக்கு உருக்கமான வாழ்த்து!

‘தர்மம் தலை காக்கும்’ போன்ற வாக்கியங்கள் எல்லாம் எம்ஜிஆர் காலத்தோடு வழக்கொழிந்து போய் விட்டது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கையில், இன்னமும் மனிதம் மக்களிடையே இருக்கத் தான் செய்கிறது என்பதை நிரூபிப்பது போல் ‘கத்துக்குட்டி’ படத்தின் இயக்குநர் சரவணன் தனது முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.

‘தர்மம் தலை காக்கும்’ போன்ற வாக்கியங்கள் எல்லாம் எம்ஜிஆர் காலத்தோடு வழக்கொழிந்து போய் விட்டது என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கையில், இன்னமும் மனிதம் மக்களிடையே இருக்கத் தான் செய்கிறது என்பதை நிரூபிப்பது போல் ‘கத்துக்குட்டி’ படத்தின் இயக்குநர் சரவணன் தனது முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார்.

soori

தமிழக கிராமங்களில் புயல் பாதிப்பின் போது துடிதுடித்து உதவ களமிறங்கினார்கள் சில நடிகர்கள். இங்கிருந்தபடியே க்ளப்களில் புயலின் சோகத்தை அனுசரித்து விட்டு அறிக்கை வெளியிட்டார்கள் பல நடிகர்கள். விஷயம் அது கிடையாது.
அப்படி களத்தில் இறங்கி, அந்த மக்களோடு உறவாடி, ‘நாங்க இருக்கிறோம் தாயீ’ என்று சொல்ல எத்தனை பேருக்கு மனசு வந்திருக்கும். அப்படி களமிறங்கி துடிதுடித்த நடிகர் சூரி நேற்று தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவர் புயல் நிவாரணங்களில் ஈடுபட்ட கிராமத்தைச் சேர்ந்த ஒரு அப்பத்தா மிக உருக்கமாக நடிகர் சூரிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைச் சொல்லியிருக்கிறார். அந்த வாழ்த்தை அப்படியே பகிர்ந்திருந்தார் இயக்குநர் சரவணன்.
ஐநூறு படங்களில் நடிச்சிருந்தாலும் இத்தனை உறவுகளைப் பெறுவது கஷ்டம்… ஆயுளுக்கும் இந்த அன்பு போதும் சூரி.. உங்க வம்சம் செழிப்பா வாழும்.
இயக்குநர் சரவணனின் பதிவு… நம் வாசகர்களுக்காக அப்படியே…

soori

“தம்பி சூரி.. இன்னிக்கு உனக்கு பொறந்த நாளாமே… இப்ப தான் நம்ம ஊரு பசங்க சொன்னாங்க. நல்லா இருக்கியாப்பா… பொறந்த நாளுக்கு புள்ள குட்டிகளோட கோயிலுக்குப் போனியா? 
உம் மனசுக்கு நீ நல்லா இருப்பே… புயல்ல வீடு வாசல எழந்து நாங்க நடுரோட்டுல நின்னப்ப, எங்கள தேடிவந்த புள்ள நீ. மத்தவுக மாரி நீயும் நிவாரணத்த கொடுத்துட்டு நாலு வார்த்த பேசிட்டு கெளம்பி இருக்கலாம். ஆனா, எங்க செருவா விடுதியிலேயே தங்கி, நாங்க படுத்திருந்த அரசாங்க பள்ளிக்கொடத்துலேயே கொசுக்கடியிலயும் குளிர்லயும் தூங்கி, எங்க ஊரு கொளத்துலேயே குளிச்சு எங்க ஊரு ஆளாவே மாறி நின்ன நீ. எங்க ஊருக்கே அதுல ரொம்ப பெருமை. 
வீடு போச்சேன்னு நா அழுதப்ப என்னய கட்டிப் புடிச்சு நீ ஆறுதல் சொன்னே… பெத்த புள்ள கூட செய்யாத பெரிய ஒதவி அது. எம்பேரங்கிட்ட பேச செல்லுபோனு கேட்டேன். மறுநாளே ஒரு தம்பி மூலமா கொடுத்து அனுப்பிவிட்ட. எம்புருசன் கோயில் பூசாரி. நாங்க நெதமும் சாமி கும்புடுறப்ப ஓம்பேரச் சொல்லாம இருந்தது இல்ல. டி.வி.யில ஓம்படம் வந்தா அப்பெல்லாம் நடிகர் சூரின்னு சொல்லுவோம். இப்பெல்லாம் எங்க புள்ள சூரின்னு சொல்றோம். நீ பல நூறு வருசம் நல்லா இருக்கனும். நேரங் கெடைக்கிறப்ப எங்க ஊரு பக்கம் வந்து மறுபடியும் எங்கள ஒரு எட்டு பாத்துட்டு போ. நம்ம சரவணன் தம்பிகிட்ட இது சம்பந்தமா சொன்னேன். நா படம் எடுக்குறப்ப அழைச்சிட்டு வரேன்னு சொன்னாப்புல… வருசக்கணக்குல இப்புடி சொல்லிக்கிட்டேதான் இருக்காப்புலேயே தவிர, அவர் படம் எடுத்த மாதிரியும் தெரியல, நீ இந்தப்பக்கம் வந்த மாதிரியும் தெரியலை. எப்புடி எவ்வளவு வேலை இருந்தாலும் ஓஞ்சொந்தக்காரங்களை நேரம் ஒதுக்கி பாப்பியோ… அந்த மாதிரி எங்க ஊரு முழுக்க ஓஞ்சொந்தம்னு நெனச்சு எங்களுக்கும் நேரம் ஒதுக்கு… ஒனக்கு எங்களோட பொறந்த நாளு வணக்கம்!”