ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் மோடியை வீழ்த்த முடியாது: தமிழிசை ஆவேசம்

 

ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் மோடியை வீழ்த்த முடியாது: தமிழிசை ஆவேசம்

ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் மோடியை வீழ்த்த முடியாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

சென்னை: ஆயிரம் ஸ்டாலின் வந்தாலும் மோடியை வீழ்த்த முடியாது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்திரபாபு நாயுடு சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அதன்பின் கூட்டாக பேட்டியளித்த இரு தலைவர்களும், பாஜகவை வீழ்த்துவது ஒன்றே குறிக்கோள் என தெரிவித்திருந்தனர். அவர்களது பேட்டியை தானும் வழிமொழிவதாக திமுக தலைவர் ஸ்டாலின் ட்வீட் செய்திருந்தார்.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தலைவர் தமிழிசை, “ஆயிரம் சந்திரபாபு நாயுடு, ஸ்டாலின் வந்தாலும் மோடியை வீழ்த்த முடியாது. ஸ்டாலின் டிடிவிதினகரன் சாதாரணமாக சந்தித்து இருந்தால் அதில் தவறு இல்லை. ஆனால் அந்த சந்திப்பு ரகசியமாக இருந்தால், அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

நேரடி அரசியலில் ஈடுபட முடியாதவர்கள், மறைமுக அரசியலை முன்னெடுத்துச் செல்கின்றனர்” என தெரிவித்துள்ளார்.

மேலும், நீட் தேர்வு குறித்து அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு, தான் பயின்றபோது நீட் தேர்வு இருந்திருந்தால் நிச்சயம் வெற்றி பெற்றிருப்பேன் என்றும் ஒரு அரியர் கூட இல்லாமல் இன்று மருத்துவராக உள்ளேன் என்றும் தமிழிசை தெரிவித்துள்ளார்.