ஆம் ஆத்மி எம்எல்ஏ கார் மீது நடத்திய துப்பாக்கிசூடு…ஒருவர் உயிரிழப்பு!

 

ஆம் ஆத்மி எம்எல்ஏ கார் மீது நடத்திய துப்பாக்கிசூடு…ஒருவர் உயிரிழப்பு!

ஆத்மி கட்சி கட்சி டெல்லியை கைப்பற்றியுள்ளது. இதனால் அக்கட்சியினர் ஆட்டம், பாட்டம்  என கொண்டாடினர்.  

டெல்லி சட்டப்பேரவை தொகுதிகளில் கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி நடந்து முடிந்த  70 தொகுதிகளுக்கான  வாக்கு எண்ணிக்கையில் ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி  62  இடங்களிலும், பாஜக 8 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. இதன்மூலம் 3வது முறையாக  ஆம் ஆத்மி கட்சி கட்சி டெல்லியை கைப்பற்றியுள்ளது. இதனால் அக்கட்சியினர் ஆட்டம், பாட்டம்  என கொண்டாடினர்.  

ttn

இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மெஹரூலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆம் ஆத்மி எம்எல்ஏ நரேஷ் யாதவ், கிஷன்கர் பகுதியில் உள்ள கோயிலில் வழிபாடு செய்தார். பிறகு வீடு திரும்பிய அவரின் வாகன அணிவகுப்பு மீது மர்ம நபர்கள்  துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் அக்கட்சியை சேர்ந்த அசோக் மான் என்பவர் உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்தார். 

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அக்கட்சி தொண்டர் ஒருவர் திட்டமிட்டு கொல்லப்பட்டது டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.