ஆம்புலன்ஸ் கதவு திறக்கப்படாததால் ஒருவர் பரிதாப பலி!

 

ஆம்புலன்ஸ் கதவு திறக்கப்படாததால் ஒருவர் பரிதாப பலி!

ஆம்புலன்ஸ்  கதவு திறக்காததால் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆம்புலன்ஸ் கதவு திறக்கப்படாததால் ஒருவர் பரிதாப பலி!

ஹைதராபாத்: ஆம்புலன்ஸ்  கதவு திறக்காததால் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஹைதராபாத்தின் ஜில்லேலாகுடா பகுதியைச் சேர்ந்தவர் செக்காலா ஆனந்த். இவர் தினமும் வேலைக்கு  உள்ளூர் ரயிலில்  பயணம் செய்வது வழக்கம். அந்த வகையில் நேற்று ரயிலில் வீட்டுக்கு திரும்பும் போது அப்போது அவருக்கு லேசான நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து உடனிருந்த  சக பயணிகள் 108 ஆம்புலன்ஸ் அழைப்பு விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ரயில் மாலாக்பெட் ரயில்நிலையத்தை அடைந்த போது ஆம்புலன்ஸ் தயாராக இருந்தது. இதையடுத்து ஆனந்தை உடனிருந்த பயணிகள் ஆம்புலன்ஸுக்கு தூக்கி வந்தனர். ஆனால் ஆனந்தை ஆம்புலன்ஸில் ஏற்றமுடியவில்லை. காரணம் ஆம்புலன்ஸின் கதவு திறக்க முடியாமல் போனது. இதனால் ஆம்புலன்ஸ்  ஊழியர்கள் கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் போராடி கதவை திறந்தனர். 

இருப்பினும் இந்த ஆம்புலன்ஸ் கதவு திறக்கும் முன்பு ஆனந்திற்கு மாரடைப்பு ஏற்பட்டு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.  இதைத் தொடர்ந்து அங்கு வந்த ஆனந்தின் உறவினர்கள், சரியான பராமரிப்பு இல்லாமல் ஒரு உயிரை பறித்துவிட்டீர்கள் என்று கூறி  ஆம்புலன்ஸ் ஊழியர்களுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் வந்தும் ஆனந்த் பரிதாபமாக உயிரிழந்தது அங்கிருந்தவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது.