ஆம்பன் புயல், கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை!

 

ஆம்பன் புயல், கொரோனா பாதிப்பை எதிர்கொள்ள நாளை கூடுகிறது மத்திய அமைச்சரவை!

வங்கக் கடலில் சூப்பர் புயலாக உருவெடுத்துள்ள ஆம்பன் புயல் நாளை கொல்கத்தா அருகில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

மத்திய அமைச்சரவைக் கூட்டம் நாளை பிரதமர் மோடி தலைமையில் கூட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
வங்கக் கடலில் சூப்பர் புயலாக உருவெடுத்துள்ள ஆம்பன் புயல் நாளை கொல்கத்தா அருகில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் நான்காம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு முடிவெடுக்கும் அதிகாரம் மாநில அரசுகள் கையில் கொடுக்கப்பட்டுள்ளது.

amphan-cyclone-789

இதனால் சில மாநிலங்களில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இந்த சூழ்நிலையில் நாளை காலை 10 மணிக்கு டெல்லியில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ரூ.20 லட்சம் கோடி சிறப்பு ஊக்கத் திட்டம், கொரோனா சவால், ஆம்பன் புயல் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.