ஆமா ஆமா ஜெயக்குமார் ஒரு அரிச்சந்திரன்தான்: கருணாஸ் அதிரடி

 

ஆமா ஆமா ஜெயக்குமார் ஒரு அரிச்சந்திரன்தான்: கருணாஸ் அதிரடி

சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் ஒரு அரிச்சந்திரன் என உலகுக்கே தெரியும் என எம்.எல்.ஏ கருணாஸ் கூறியிருக்கிறார்

முக்குலத்தோர் புலிப்படையின் தலைவர் கருணாஸ் சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் முதல்வரையும், காவல்துறை அதிகாரியையும் மிகவும் தரக்குறைவாக பேசினார். மேலும், கூவத்தூர் என்ற இடம் இருப்பதையே நான்தான் சசிகலாவிடம் கூறினேன் என பல விவகாரங்களை பேசினார். அவரது இந்த பேச்சு பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனையடுத்து அவர் மீது 8 பிரிவுகள் மீது நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனையடுத்து கருணாஸின் பேச்சு குறித்து அமைச்சர் ஜெயக்குமார், சசிகலா தரப்பினரிடம் கருணாஸ் பணம் வாங்கியிருப்பார். அவர் பேசியதற்கான பலனை அனுபவிப்பார் என கூறினார். இதற்கிடையே கருணஸ் தலைமறைவாகிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் நான் எங்கும் தலைமறைவாகவில்லை வீட்டில்தான் இருக்கிறேன் என அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில், சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ கருணாஸ், முழு வீடியோ பார்த்தால் நான் பேசியதில் தவறில்லை என்பது புரியும். பொதுமேடையில் ஒருமையிலி பேசியதற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். முக்குலத்தோர் இளைஞர்களை தமிழகம் முழுவதும் காவல்துறையினர் தாக்குகின்றனர். எம்.எல்.ஏவான எனக்கே இவ்வளவு பிரச்னைகள் வருகிறதென்றால் சாதாரண மக்கள் எவ்வளவு பிரச்னைகளை சந்திப்பார்கள்.
கூவத்தூர் விவகாரம் குறித்து தேவைப்பட்டால் உயர் நீதிமன்றத்தில் தெரிவிப்பேன். அமைச்சர் ஜெயக்குமார் ஒரு அரிச்சந்திரன் என்பது இந்த உலகத்திற்கே தெரியும் என்றார்.