‘ஆமாம்… நீ லூசு தான்’: மீண்டும் மீராவிடம் எகிறிய சாக்ஷி 

 

‘ஆமாம்… நீ லூசு தான்’: மீண்டும் மீராவிடம் எகிறிய சாக்ஷி 

பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.

சென்னை: பிக் பாஸ் 3யின் இன்றைக்கான மூன்றாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடைசி ஆளாக நுழைந்தவர் மீரா மிதுன். இவர் வீட்டில் நுழைந்த நாள் முதல் போட்டியாளர்கள் அனைவரிடமும் சண்டை போட்டு வருகிறார். அது மட்டுமின்றி மற்றவர்கள் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல் , பழி போடுவது, பொய் சொல்வது என்று இவர் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது. 

இவர் செய்யும் செயலை பார்த்து சாக்ஷி சமீபத்தில், ‘நீ என்ன லூசா இல்ல, லூசு மாறி நடிக்கிறியா?’ என்று கடுமையாகக் கேள்வி கேட்டியிருந்தார். இந்த நிலையில் அந்த பிரச்சனை மீண்டும் மீரா  கிளறியுள்ளார். அதற்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது. அதில் மீரா, ‘ நீ என்னை லூசு சொன்ன அப்போவே எல்லாம் முடிஞ்சிது’ என்றார். இதை கேட்ட சாக்ஷி, ‘ஆமாம்… நீ லூசு தான். ஒரு தலைவியாகக் கேட்க வேண்டியது எனது கடமை. இதில் பிரண்ட்ஷிப் ஒன்றும் இல்லை’ என்று வாக்குவாதம் செய்கிறார். 

இந்த விஷயத்தில் சம்பந்தம் இல்லாமல் ஷெரின் நுழைந்து, ‘அவ உனக்காக எவளோ ஸ்டாண்ட் பண்ணா தெரியுமா, உனக்கு இதே வேலை தானா? வாரம் ஒருவரை தேர்ந்தெடுத்து அவர்களை டார்கெட் செஞ்சிகிட்டே இருக்க’ என்று கூறியுள்ளார். 

மேலும் வனிதா சென்ற பிறகு ஒரு சண்டை கூட வரவே இல்லை என்று ரசிகர்கள் கவலையுடன் இருந்தனர். தற்போது அதை போக்கும் வகையில் இன்றைய எபிசொட் அமைந்துள்ளது.