ஆப்கனிலிருந்து மும்பைக்கு வந்த சாக்கு மூட்டைகள் – வேறென்ன போதைப்பொருள்தான்!

 

ஆப்கனிலிருந்து மும்பைக்கு வந்த சாக்கு மூட்டைகள் – வேறென்ன போதைப்பொருள்தான்!

சரக்குக்கு உரிமையாளர்கள் சொன்னது போலவே 260 பைகளில் துளசி விதைகள்தான் இருந்தன. ஆனாலும் காவல்துறையினர் துருவித்துருவி தோண்டவே, மூட்டைகளுக்கு நடுவே மறைத்து வைக்கப்பட்டிருந்த 130 கிலோ ஹெராயினை கண்டுபிடித்தனர்.

ஆப்கானிஸ்தானிலிருந்து நவிமும்பைக்கு துளசி விதைகளை ஏற்றி வருவதாகக்கூறி சணல்மூட்டைகளில் குவியல் குவியலாக கப்பலில் கொண்டுவந்திருக்கிறார்கள். ஆனால், மேற்படி பார்சல்களில் வேறு ஏதோ சமாசாரம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைக்கவும், மூட்டைகளை சோதனை செய்கிறார்கள். சரக்குக்கு உரிமையாளர்கள் சொன்னது போலவே 260 பைகளில் துளசி விதைகள்தான் இருந்தன. ஆனாலும் காவல்துறையினர் துருவித்துருவி தோண்டவே, மூட்டைகளுக்கு நடுவே மறைத்து வைக்கப்பட்டிருந்த 130 கிலோ ஹெராயினை கண்டுபிடித்தனர்.

130 kg Heroin seized

போதைப்பொருளை கடத்திவந்த சரக்குக் கப்பல் ஆப்கானிஸ்தானின் இஸ்லாம் குய்லாவிலிருந்து வந்தது விசாரணையில் தெரியவ‌ந்தது. இது தொடர்பாக ஆப்கானை சேர்ந்த ஒருவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏற்கெனவே, கடல்வழியாக கடத்தி வரப்பட்ட 200 கிலோ ஹெராயினை பறிமுதல் செய்திருந்த போலீசார், 4 ஆப்கானியர்கள் உட்பட 7 பைரை கைது செய்திருந்தனர். இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப்பொருள்களின் மதிப்பு 1,320 கோடியாம்.