ஆபாச படங்களைக் காட்டி 13 வயது சிறுமியை சீரழித்த கொடூரன் கைது…

 

ஆபாச படங்களைக் காட்டி 13 வயது சிறுமியை சீரழித்த கொடூரன் கைது…

பெரும்பாலான பாலியல் வன்முறைகள் போதிய பாதுகாப்பும்,கண்காணிப்பும் இல்லாததாலேயே நடக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்.வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகில் உள்ள சித்தூர்கேட் பகுதியில் ஆட்டோ ட்ரைவர் ஒருவரின் மகள் வீட்டில் தனிமையில் இருப்பது வழக்கம்.

பெரும்பாலான பாலியல் வன்முறைகள் போதிய பாதுகாப்பும்,கண்காணிப்பும் இல்லாததாலேயே நடக்கிறது என்பதற்கு இந்த சம்பவம் உதாரணம்.வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகில் உள்ள சித்தூர்கேட் பகுதியில் ஆட்டோ ட்ரைவர் ஒருவரின் மகள் வீட்டில் தனிமையில் இருப்பது வழக்கம்.

rape

அதுபோல் சிறுமி தனியாக இருக்கும் நேரம் பார்த்து அங்கு வந்திருக்கிறார், ஆட்டோ ட்ரைவரின் உறவினர் இலியாஸ்.சிறுமியிடம் ஆபாச படங்களைக் காட்டி,சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.அதனைத் தொடர்ந்து,இந்த சம்பவம் குறித்து வெளியில் சொன்னால் சிறுமியின் பெற்றோரைக் கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டியிருக்கிறார்.

rape

இலியாஸின் வார்த்தைக்கு பயந்துகொண்டு நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லாமல் இருந்திருக்கிறார் அந்தச் சிறுமி.சில மாதங்கள் கழித்து சிறுமியின் உடலில் ஏற்பட்ட மாற்றங்களை வைத்து பரிசோதித்து பார்த்த பிறகுதான் சிறுமி கர்ப்பமாக இருப்பதும்,அதற்கு காரணம் இலியாஸ் என்பதும் தெரிய வந்திருக்கிறது.
 
உடனடியாக இது குறித்து சிறுமியின் கொடுத்த புகாரின் பேரில்,இலியாஸ் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.