ஆபாச காட்சிகளை வெளியிடுவதாக மிரட்டிய துணை நடிகர் கைது ! துணை நடிகை அளித்த புகாரில் சிறையில் அடைத்தது போலீஸ் !

 

ஆபாச காட்சிகளை வெளியிடுவதாக மிரட்டிய துணை நடிகர் கைது ! துணை நடிகை அளித்த புகாரில் சிறையில் அடைத்தது போலீஸ் !

பக்ரூதின் அவருடன் நெருக்கமாக இருக்கும்போது எனக்கே தெரியாமல் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு தற்போது பணம் கேட்டு மிரட்டுவதாக புகாரில் ஜெனிபர் தெரிவித்திருந்தார்.

ஆபாச வீடியோ காட்சிகளை வைத்து பணம் கேட்டு மிரட்டுவதாக துணை நடிகை அளித்த புகாரில் அவரது முன்னாள் காதலர் பக்ரூதின் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

டிவி, சினிமாவில் துணை நடிகையாக வலம் வந்த நடிகை ஜெனிபர் வடபழனி காவல்நிலையத்தில் சில வாரங்களுக்கு முன்னர் புகார் ஒன்று அளித்திருந்தார்.

video

சினிமா உலகில் தனக்கு அறிமுகமான துணை நடிகரான பக்ரூதின் ஆரம்பத்தில் நட்பாக இருந்து பின்னர் தாங்கள் காதலர்களாக மாறியதாகவும், அவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்ததால் அவருடைய காதலை ஏற்றுக் கொண்டு பக்ருதினுடன் வாழ்ந்து வந்ததாக தெரிவித்திருந்தார். இதை பயன்படுத்திக் கொண்ட பக்ரூதின் அவருடன் நெருக்கமாக இருக்கும்போது எனக்கே தெரியாமல் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு தற்போது பணம் கேட்டு மிரட்டுவதாக புகாரில் ஜெனிபர் தெரிவித்திருந்தார்.

police

வீடியோக்களை காட்டி பணம் கேட்டு மிரட்டுவதாக பக்ரூதின் மீது ஏற்கனவே புகார் அளித்த நிலையில் அவரை போலீசார் எச்சரித்து அனுப்பினர். ஆனால் வீடியோக்களை வெளியிடுவதாக பக்ரூதின் தற்போது மிரட்டுவதாகவும் எனக்கும் என்னுடைய என் தாய்க்கும் கொலை மிரட்டல் தந்ததாக குறிப்பிட்டிருந்தார் ஜெனிபர். புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறை பக்ரூதின் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.. இதற்கிடையே பக்ரூதின் போலீசாரிடம் தான் அதுபோல் மிரட்ட வில்லை எனவும், தன்னிடம் கடனாக வாங்கிய பணத்தை திருப்பிக் கேட்டதால் வேண்டுமென்றே தன் மீது அவதூறு புகார் தருவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பக்ரூதினை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்