ஆன்லைன் கேமில் 3 முறை கணவன் தோல்வி ! ஆத்திரத்தில் மனைவியின் முதுகெலும்பை முறித்த கணவன் ! 

 

ஆன்லைன் கேமில் 3 முறை கணவன் தோல்வி ! ஆத்திரத்தில் மனைவியின் முதுகெலும்பை முறித்த கணவன் ! 

ஊரடங்கு உத்தரவு காரணமாக நாடெங்கும் மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதனால் பலர் டிவி பார்ப்பதிலும் சின்ன சின்ன விளையாட்டுகளும் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். தற்போது செல்போனில் லூடோ என்ற விளையாட்டு பிரபலம் ஆகி வருகிறது. 

ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதால் பல இடங்களில் குடும்ப வன்முறை அதிகரித்துள்ள நிலையில் ஆன்லைன் விளையாட்டில் தொடர்ந்து 3 முறை தோற்கடித்ததால் மனைவியை கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் குஜராத் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. 
ஊரடங்கு உத்தரவு காரணமாக நாடெங்கும் மக்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இதனால் பலர் டிவி பார்ப்பதிலும் சின்ன சின்ன விளையாட்டுகளும் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். தற்போது செல்போனில் லூடோ என்ற விளையாட்டு பிரபலம் ஆகி வருகிறது. 

ludi-play

இந்நிலையில் குஜராத் மாநிலம் வதோதராவில் 24 வயது பெண் ஒருவர் தனது கணவருடன் ஆன்லைனில் லூடோ விளையாட்டு விளையாடி உள்ளார். இந்த விளையாட்டில் தொடர்ந்து 3 முறை கணவரை தோற்கடித்தார். இதனால் கணவர் மன வேதனை அடைந்தார். மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டு அவரை கண்மூடித்தனமாக அடித்துள்ளார். இதையடுத்து இருவரும் சண்டை போட்டுள்ளனர். பின்னர் கணவர் அடித்ததில் பெண்ணின் முதுகெலும்பு முறிந்து போனது. இதையடுத்து பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இந்நிலையில் தகவல் அறிந்த சமூக ஆர்வலர்கள் அந்த பெண்ணுக்கு தேவையான உதவிகள் செய்து வருகின்றனர். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அந்த பெண் தற்போது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இதுகுறித்து போலீஸ் ஒருவர் தெரிவிக்கையில் இந்த சம்பம் குறித்து கணவர் எச்சரிக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து குடும்ப வன்முறையில் ஈடுபட்டால் சிறை செல்ல நேரிடும் என எச்சரித்ததாகவும் தெரிவித்தார். மேலும் மீண்டும் அந்த பெண்ணுடன் ஒற்றுமையுடன் வாழ கணவர் சம்மதம் தெரிவித்ததால் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவித்தார்.