ஆந்திர சட்டசபையில் கடும் அமளி: ஜெகன் மோகன் ரெட்டி ஆவேசம்!
விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவது தொடர்பான பிரச்னையில் ஆந்திர சட்டப்பேரவையில் தெலுங்கு தேசம் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்
ஆந்திரா: விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவது தொடர்பான பிரச்னையில் ஆந்திர சட்டப்பேரவையில் தெலுங்கு தேசம் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
ஆந்திராவின் முதல்வராக பதவியேற்ற முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மாநிலத்தில் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதாக அறிவித்தார். இதையடுத்து ஜெகன் மோகன் ரெட்டி விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதாகத் தவறான தகவல்களை வழங்குவதாகக் கூறி, அவர் மீது தெலுங்கு தேசம் கட்சி உரிமை மீறல் நோட்டீஸ் கொடுத்திருந்தது.
#jaganMohanReddy #Jagan ? in assembly! pic.twitter.com/2ZAJR36lTI
— Jaffaism (@Jaffaism007) July 12, 2019
இதற்கு சட்டப்பேரவையில் பதிலளித்துப் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, தெலுங்கு தேசம் தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடுவை நோக்கி கடுமையாக விமர்சித்தார். இதைத் தொடர்ந்து ஜெகன் மோகன் ரெட்டியை பேசவிடாமல் தெலுங்கு தேசம் கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய சந்திரபாபு நாயுடு இந்த விவகாரத்தில் ஜெகன் மோகன் ரெட்டி பதவி விலகத் தயாரா? என்று ஆவேசமாகக் கூறினார். இதனால் சட்டசபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.