ஆந்திரா: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மந்திரவாதி மீது தாக்குதல்

 

ஆந்திரா: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த மந்திரவாதி மீது தாக்குதல்

குடும்பத்தில் அமைதியைக் கொண்டுவர சிறப்பு பூஜை செய்த மந்திரவாதி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால் கிராம மக்கள் அவரை கட்டி வைத்து அடித்தனர். இது ஆந்திர மாநிலம் டொனகொண்டா மண்டலம் அருகே ருத்ரசமுத்திரம் கிராமத்தில் நடைபெற்றுள்ளது. 

குடும்பத்தில் அமைதியைக் கொண்டுவர சிறப்பு பூஜை செய்த மந்திரவாதி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததால் கிராம மக்கள் அவரை கட்டி வைத்து அடித்தனர். இது ஆந்திர மாநிலம் டொனகொண்டா மண்டலம் அருகே ருத்ரசமுத்திரம் கிராமத்தில் நடைபெற்றுள்ளது. 

ருத்ராசமுத்திரத்தில் உள்ள எஸ்சி காலனியில் வசிக்கும் கோனா பலராஜு மற்றும் சுஜாதா என்ற தம்பதியினருக்கு நீண்ட காலமாக குடும்ப பிரச்சனைகள் இருந்துள்ளன.  இதனால் சுஜாதாவிடம் இருந்து பிரிந்து விட கணவர் முயற்சி செய்துள்ளார். ஆனால் கணவருடன் சேர்ந்து வாழவேண்டும் என சுஜாதா பல்வேறு கோவில்களில் பூஜைகள் செய்து வருகிறார். 
இந்நிலையில் இப்பிரச்சனைக்கு தீர்வு காண தன்னை கடவுளின் தூதர் என அறிவித்துக்கொண்ட மந்திரவாதியான தெலுங்கானாவைச் சேர்ந்த கஜ்ஜெலா விஷ்ணுவர்தனை அணுகி உள்ளனர். இதையடுத்து சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என அவர்களுக்கு அறிவுரை கூற இதற்காக குண்டூர் மாவட்டத்தில் உள்ள பிதுகுரல்லாவில் சில நாட்கள் தம்பதி வசித்து வந்தனர்.
இந்நிலையில் அந்த தம்பதியின் நிலத்தில் புதையல் இருப்பதாக மந்திரவாதியும் அவரது சீடர் ராமஞ்சநேயுலுவும் கூறியுள்ளனர். இதற்காக சிறப்பு பூஜை செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். இதற்காக அந்த தம்பதி சொந்த ஊரான ருத்ரசமுத்திரத்திற்கு மந்திரவாதி வந்துள்ளார். பின்னர் பூஜை தொடங்கியது. தனக்கு வழங்கப்பட்ட ஒரு அறையில் பூஜை செய்வது என்ற பெயரில் தம்பதியினரின் மகளை தவிர வேறு யாரும் எந்த வரக்வடாது என கூறியுள்ளார். அப்படி வந்தால் புதையல் கிடைக்காது என கூறியுள்ளார். 

girl-abuse-56.jpg

இதனால் பயந்து போன தம்பதியினர் மந்திரவாதி கூறியபடி தங்கள் மகளை மந்திரவாதியின அறைக்கு அனுப்பினர். இருந்தாலும் மந்திரவாதியை பற்றி சந்தேகம் அடைந்த உறவினர் ஜன்னல் வழியாக பார்க்க அங்கு சிறுமியை துன்புறுத்துவதைக் கண்டார். இதனால் கோபமடைந்த உள்ளூர்வாசிகள் அறையில் இருந்து மந்திரவாதியை வெளியே அழைத்து வந்து ஒரு மரத்தில் கட்டி அடித்தனர்.
பூஜையின் முதல் நாளிலிருந்து அவர் தன்னை துஷ்பிரயோகம் செய்வதாகவும், அறையில் நடந்த சம்பவங்கள் குறித்து யாரிடமும் சொன்னால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று மிரட்டியதாகவும் சிறுமி தெரிவித்தார். இதையடுத்து அந்த மந்திரவாதி கைது செய்யப்பட்டார்.