“ஆந்திராவில் மது பாட்டில் விலை 50% சதவீதம் உயர்வு”.. இருந்தாலும் குடிச்சே தீருவோம் டா என கூறும் குடிமகன்கள்!

 

“ஆந்திராவில் மது பாட்டில் விலை 50% சதவீதம் உயர்வு”.. இருந்தாலும் குடிச்சே தீருவோம் டா என கூறும் குடிமகன்கள்!

தமிழகத்திலும் வரும் 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக்குகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் இந்தியாவில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி மக்களை கிட்டத்தட்ட 40 நாட்களாக வீட்டிலேயே முடங்க வைத்துள்ளது. எல்லா மாநிலங்களிலும் ஒலிக்கும் ஒருமித்த குரலான ‘மது ஒழிப்பு’ கொரோனாவால் நடந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக 40 நாட்களாக மது இல்லாமல் இருக்கும் குடிமகன்களை மதுவில் இருந்து மீட்டுக் கொண்டு வர இதுவே நல்ல சூழல் என்று பல கருத்துக்கள் எழுந்தன.

ttn

ஆனால், கொரோனா தடுப்பு நடவடிக்கையின் மொத்த செலவையும் அரசே ஏற்பதால், மதுக்கடைகளை திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதனால் ஆந்திரா, கர்நாடகா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலும் வரும் 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக்குகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ttn

எவ்வளவு தான் விலையை உயர்த்தினாலும் குடித்தே ஆக வேண்டிய காட்டாயத்தில் இருக்கும் குடிமகன்கள் மதுக்கடைகளை திறந்தவுடன் சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டு, மதுபாட்டில்களை வாங்கிக் குடிக்கின்றனர். கொரோனாவால் காஜானாவை இழந்து வரும் மாநில அரசுகள் அதனை சமாளிக்க மது விலையை உயர்த்தி வருகின்றன. அந்த வகையில் கர்நாடகாவில் 75% மது பாட்டில் விலை உயர்த்தப்பட்டது.

ttn

இந்நிலையில், ஆந்திராவில் மதுபானங்களின் விலையை 50% உயர்த்தி ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் படி, புதிய விலை இன்று முதல் அமலுக்கு வரும் என்றும் மக்களிடையே மதுப் பழக்கத்தை குறைக்கவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுவிலையை எவ்வளவு தான் உயர்த்தினாலும் குடித்தே தீருவோம் என்று வரிசையில் காத்துக் கிடக்கின்றனர் குடிமகன்கள்…