ஆத்தூர் அருகே பெண் மருத்துவர் ஓட்டி வந்த கார் மோதி ஒப்பந்த பணியாளர் பரிதாபமாக உயிரிழப்பு

 

ஆத்தூர் அருகே பெண் மருத்துவர் ஓட்டி வந்த கார் மோதி ஒப்பந்த பணியாளர் பரிதாபமாக உயிரிழப்பு

ஆத்தூர் அருகே பெண் மருத்துவர் ஓட்டி வந்த கார் மோதி ஒப்பந்த பணியாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

ஆத்தூர்: ஆத்தூர் அருகே பெண் மருத்துவர் ஓட்டி வந்த கார் மோதி ஒப்பந்த பணியாளர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள புதுப்பேட்டை காமாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகத்தின் மகன் கார்த்திகேயன் (வயது 32) ஒப்பந்த தொழிலாளராக பணியாற்றி வந்தார். பொது வினியோகத் திட்டத்தின் கீழ் லாரிகள் மூலம் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை கொண்டு சென்று விநியோகிக்கும் பணியாளராக கார்த்திகேயன் பணியாற்றி வந்தார்.

நேற்று காலை ஆத்தூரில் இருந்து சார்வாய் கிராமத்தில் உள்ள கிடங்குக்கு கார்த்திகேயன் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அம்மம்பாளையம் என்ற இடத்தின் அருகே அவர் சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்று அவரது பைக்கின் பின்புறம் மீது மோதியது. இதனால் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட கார்த்திகேயன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். கார்த்திகேயன் பைக் மீது மோதிய காரை தாரணி (38) என்பவர் ஓட்டி வந்தார். அவர் ஒரு மருத்துவர் ஆவார். நீலகிரி மாவட்டம் ஊட்டி கால்நடை மருத்துவமனை தெரு பகுதியை சேர்ந்த டாக்டர் சிவக்குமார் என்பவரது மனைவி ஆவார். தாரணி ஊட்டியில் இருந்து திருவண்ணாமலைக்கு தனியாக காரில் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டது.

ttn

மேலும் பைக்கின் மீது மோதிய பிறகு நிற்காமல் சென்ற தாரணி ஓட்டி வந்த கார் சாலையின் இடதுபுறம் பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட, லேசான காயத்துடன் மருத்துவர் தாரணி ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்த விபத்து குறித்து தகவலறிந்த ஆத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கார்த்திகேயன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.