‘ஆதித்ய வர்மா’படத்தைப் பார்த்து ஷாக் ஆன விக்ரம்…மகனைக் காப்பாற்ற எடுத்த பரிதாப முடிவு…

 

‘ஆதித்ய வர்மா’படத்தைப் பார்த்து ஷாக் ஆன விக்ரம்…மகனைக் காப்பாற்ற எடுத்த பரிதாப முடிவு…

பாலாவின் ‘வர்மா’ படத்தைப் புறம்தள்ளிவிட்டு விக்ரமும் தயாரிப்பாளர்களும் அடுத்து உருவாக்கிய ‘ஆதித்ய வர்மா’வின் முதல் பிரதியைப் பார்த்துவிட்டு சீயான் படு அப்செட்

பாலாவின் ‘வர்மா’ படத்தைப் புறம்தள்ளிவிட்டு விக்ரமும் தயாரிப்பாளர்களும் அடுத்து உருவாக்கிய ‘ஆதித்ய வர்மா’வின் முதல் பிரதியைப் பார்த்துவிட்டு சீயான் படு அப்செட் ஆனதாகவும் அப்படம் ரிலீஸாவதற்கு முன்பே தனது மகனைக்காப்பாற்ற அடுத்த இயக்குநரைத் தேடிப்பிடித்திருப்பதாகவும் தெரிகிறது. அந்த இயக்குநர் வேறு யாருமல்ல ‘தேவி 2’ என்கிற படுசொதப்பல் படம் கொடுத்திருக்கும் ஏ.எல்.விஜய்தான்.

al vijay

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்துள்ள தேவி 2 படம் மே 31 ஆம் தேதி வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. படு  திராபையாக வந்துள்ள இப்படம் முதல் இரண்டு நாட்களிலேயே தமிழகத்தின் 80 சதவிகித தியேட்டர்களில் தூக்கி அடிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் இயக்குநர் விஜய், ஒரு படம் இயக்கும்போதே இன்னொரு படத்தை ஒப்பந்தம் செய்துவிடுவது வழக்கம். ஆனால் இந்த ’தேவி 2’ வெளியாகிவிட்ட பின்பும் அடுத்த படம் பற்றி எந்தத் தகவலும் இல்லை.ஆனால் தகவல் வெளியே வரவில்லையே தவிர, அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டாராம் இயக்குநர் விஜய். நடிகர் விக்ரம் மகன் துருவ்வை நாயகனாக வைத்து அடுத்த படத்தை விஜய் இயக்கவிருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

dhruv

’தேவி 2’ ரிலீஸுக்கு முன்பே விக்ரம் மகனுக்காக விஜய் ஒரு கதை சொன்னதாகவும் அது விக்ரமுக்குப் பிடித்துவிட்டதால் படமாக எடுக்க சம்மதித்ததாகவும் தெரிகிறது. இயக்குநர் விஜய் இயக்கத்தில் தெய்வத்திருமகள், தாண்டவம் ஆகிய இருபடங்களில் விக்ரம் நடித்திருக்கிறார்.அதில் ‘தெய்வத் திருமகள்’ படம் ஓ.கே. ஆனால் ‘தாண்டவம்’ படமானது  தற்போதைய ‘தேவி 2’படத்தையும் விட மோசமான தோல்வியைக் கண்ட படமாகும். பையனை இரண்டாவது படத்துலயமா பாழுங்கிணத்துல தள்ளுவீங்க சீயான்.