ஆதார் அலப்பறை… 45 வயது கூலி தொழிலாளிக்கு 120 வயது என பதிவிட்டதால் சர்ச்சை! 

 

ஆதார் அலப்பறை… 45 வயது கூலி தொழிலாளிக்கு 120 வயது என பதிவிட்டதால் சர்ச்சை! 

45 வயது கூலி தொழிலாளிக்கு 120 வயது என ஆதார் அட்டையில் உள்ளதால் கூலித்தொழிலாளி ஒருவர் செய்வதறியாது திகைத்து நிற்கிறார். 

45 வயது கூலி தொழிலாளிக்கு 120 வயது என ஆதார் அட்டையில் உள்ளதால் கூலித்தொழிலாளி ஒருவர் செய்வதறியாது திகைத்து நிற்கிறார். 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பெரிய செம்மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் மகாலிங்கம். இவர் கடந்த ஆண்டு ஆதார் அடையாள அட்டையை அரசிடமிருந்து பெற்றுள்ளார். ஆதார் அட்டையை வீட்டிற்குள் பத்திரமாக வைத்திருந்த நிலையில் தற்போது வீட்டு கடனுக்காக வங்கியை நாடியுள்ளார். அதை பார்த்த வங்கி அதிகாரிகள் நீங்கள் 6.11.1990 ஆண்டில் பிறந்துள்ளதாக ஆதாரில் அச்சிடப்பட்டுள்ளது. எனவே தற்போது உங்களுக்கு 120 வயதாகிறது. எனவே உங்களுக்கு லோன் தர முடியாது என தெரிவித்திருக்கின்றனர். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்,  

இது குறித்து உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கைகளும் இல்லாததால் செய்வதறியாது திகைத்து நிற்கிறார்.