ஆதரவாளர்களை சந்திக்க தடுப்பை தாண்டி குதித்த பிரியங்கா காந்தி: இந்திராவோடு ஒப்பிடும் நெட்டிசன்கள்; வைரல் வீடியோ!
ஆதரவாளர்களைச் சந்திக்கப் பிரியங்கா காந்தி தடுப்புக்களைத் தாண்டி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசம்: ஆதரவாளர்களைச் சந்திக்கப் பிரியங்கா காந்தி தடுப்புக்களைத் தாண்டி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் சார்பில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார் பிரியங்கா காந்தி. இவர் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பொதுக்கூட்டங்களில் கலந்து அனல் தெறிக்கும் பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரியங்கா காந்தி கலந்து கொண்டார். அவரை காண ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள் காத்திருந்தனர். மேலும் அவர்கள் பிரியங்காவை கண்டதும் மகிழ்ச்சியில் ஆரவாரத்துடன் துள்ளிக் குதித்தனர். இதைக் கண்ட தடுப்புச் சுவரை எகிறி குதித்து தொண்டர்கள் இருந்த பக்கத்திற்குச் சென்றார். பின்னர் அவருடன் கைகுலுக்கியதுடன், அவர்களுடன் செல்பியும் எடுத்துக் கொண்டார்.
Congress General Secretary Ms @priyankagandhi Jumps Over Barricade To Meet Supporters.#PriyankaGandhi @INCIndia @RahulGandhi @INCKarnataka pic.twitter.com/BKKtNfhKyI
— Faizal Peraje ?? (@faizalperaje) May 13, 2019
சேலை அணிந்திருந்த பிரியங்கா எதைப் பற்றியும் யோசிக்காமல் ஆதரவாளர்களுக்காகத் தடுப்பை தாண்டி வந்த வீடியோ வைரலாகி வருகிறது. அவருடன் அவரது பாதுகாவலர்களும் குதித்தனர். இந்த வீடியோவை கண்ட பலரும் இந்திரா காந்தியின் துணிச்சல் பிரியங்காவிடம் உள்ளது என்று கூறி வருகின்றனர்.